search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாரஸ் லாரிகள்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட திரளானோர் பங்கறே்பு
    • காவல்துறை மூலம் இந்த வழியாக செல்லுகின்ற லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும்

    ஆரல்வாய்மொழி :

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மங்கம்மாள் சாலை வழியாக இரவு- பகலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்களும் பேரூராட்சி நிர்வாகமும் அதிகாரிகளுக்கு பல தடவை மனு கொடுத்தும் பலன் இல்லை. மேலும் வாகனம் செல்லக் கூடாது என்று எச்சரித்தும் வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

    இதைக் கண்டித்து பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டார்கள்.

    இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த வழியாக டாரஸ் லாரிகள் செல்லும் போது பல்வேறு விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. தடுக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. தமிழகத்திலே பெறப்படுகின்ற மனுக்கள் குப்பை தொட்டிக்கு தான் செல்கிறது. பொதுமக்கள் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் இந்த வழியாக செல்லுகின்ற லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அடுத்த கட்டமாக இந்தப் பகுதி வழியாக வருகின்ற டாரஸ் லாரியை சிறை பிடிக்க போவதாக தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுதா பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் ஜெனட், சதீஷ்குமார், பாலமுருகன், மணி, நவமணி, ஜோசப் ரெத்தின ராஜ், ஏசுமணி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமலிங்கம், கச்சேரி நாகராஜன், கண்ணாடி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், எபநேசர், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • 100-க்கணக்கான லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில், ஜூலை.12-

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அ ளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் பல்வேறு நடவடிக்கை களை மேற் கொண்டு வருகிறார்கள்.

    இருப்பினும் கனிமவ ளங்கள் கடத்தப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளுக்கும் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் காலை நேரங்களில் டாரஸ் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து புறவழிச்சாலை வழியாக கனிவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வழியாக லாரிகள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் காலை நேரங்களில் நாகர்கோவில் நகருக்குள் டாரஸ் லாரிகள் கனிம வளங்கள் கடத்திச் செல்வதாகவும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 16 டயர் லாரிகளை இயக்குவதால் ரோடுகள் சேதம் அடைவதாகவும் அதிக பாரங்கள் ஏற்றி வரும் வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்கலை சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

    அதிக பாரம் ஏற்றி வரும் டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் ஒரு சில லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி உள்ளதா, அதிக பாரம் ஏற்றி வருகிறார்களா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களில் மட்டும் 100-க்கணக்கான லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

    அதிக பாரம் ஏற்றி வந்ததாக பறிமுதல் செய்யப் பட்ட லாரிகள் தாலுகா அலுவலகங்களில் நிறுத்தப் படட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட லாரிகளை அந்தந்த போலீஸ் நிலையங்க ளில் நிறுத்தி வைத்துள்ளனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதிக பாரம் ஏற்றி வந்ததாக 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பது. அந்த லாரிகள் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் அனைத்தும் கோட்டார் போலீஸ் நிலை யத்தின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட லாரிகள் போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ளன.

    லாரிகள் அனைத்தும் காட்சி பொருளாக நின்று கொண்டிருக்கிறது. நிறுத்தப் படட்ட லாரிகளின் சக்கரங்களில் இருந்து காற்றுகள் இறங்கி மோசமான நிலையில் காணப்படுகிறது. லாரிகள் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. விபத்துக்கள் நடக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக அந்த போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள லாரிகளை போலீசார் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ரூ.25 லட்சம் அபராதம் வசூல்
    • அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு தினமும் டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் அதிகபாரத்துடன் கொண்டு செல்லப்படுவதால் சாலைகள் சேதம் அடைவதுடன் விபத்துகளும் அதிக அளவு நடைபெற்று வருகிறது.

    எனவே அதிகபாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் நகர பகுதியில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைய தடை இருந்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வழியாக இறச்சகுளம் களியங்காடு வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கனிம வள கடத்தலை கட்டுப்படுத்த இரவு, அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வரு கிறார்கள். அனுமதிஇன்றி கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 15 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.25 லட்சம் அபராத தொகையாக வசூல் ஆகியுள்ளது. அதிக பாரம் ஏற்றி வந்து பிடிபட்ட லாரிகள் அந்தந்த போலீஸ் நிலை யங்களின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டிய பிறகு மட்டுமே அந்த லாரிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

    கோட்டார் பகுதியில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 9 டாரஸ் லாரிகள் பிடிபட்டது. அந்த லாரி டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிப்பட்ட லாரிகள் போலீஸ் நிலையத்தின் முன் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது காலை நேரங்களில் அதிக அளவு வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. நாகர்கோவில் நகர பகுதிகளிலும் காலை நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    எனவே போலீசார் காலை நேரங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • லாரியில் அதிக பாரத்துடன் ஜல்லி ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் தினமும் போலீசாரும் ,அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    நேற்று காலையில் தக்கலை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 டாரஸ் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். களியக்காவிளை பகுதியில் 4 லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டது.

    நேற்று ஒரே நாளில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலமாக ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    இன்று காலையிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோ வில் நகர் பகுதியில் நடத்தப் பட்ட சோதனையின் போது அந்த வழியாக வந்த லாரி களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். கோட்டார் பகுதியில் நடந்த சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 9 டாரஸ் லாரிகள் சிக்கியது. பிடிபட்ட லாரிகளை கோட்டார் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். அந்த லாரிகள் அனைத்தும் கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. பிடிபட்ட லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    விளவங்கோடு தாலுகா தனி வட்டாட்சியர் தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அதிகாரம் ஏற்றி சென்ற கனக லாரியை மடக்கி சோதனை செய்தனர், லாரியில் அதிக பாரத்துடன் ஜல்லி ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். மேலும் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர், அதேபோல அதிக பாரம் ஏற்றிச் சென்ற மற்றொரு கனக கனரக லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை பெற்று வருகிறது.

    • ரூ.13 லட்சம் அபராதம் வசூல்
    • குமரி மாவட்ட கனிம வளம் கடத்தல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கனிம வளம் கடத்தல் பிரிவு சப் - இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் திலீபன். இவருக்கு நேற்று மாலை கேரளாவுக்கு மணல் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சுதாரித்து கொண்டு குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டார்.

    அப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு சென்ற 18 டாரஸ் லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 18 டாரஸ் லாரிகளையும், ரூ. 13 லட்சம் அபராதமும் விதித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் திடீர் நடவடிக்கையால் கடத்தல் கும்பல் அச்சத்தில் உள்ளனர்.

    ×