search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலத்தில் மழை"

    • ஏற்காட்டில் தொடர் மழையினால் கிளியூர் நீர் வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
    • தொடர் மழையினால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது.

    சேலம்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை மழை பொழிவு காலமாகும். சேலம் மாவட்டத்தில் 2 பருவமழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    நடப்பாண்டு சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் சாரல் மழை கொட்டியது. சேலம், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலைம், ஜங்சன், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கோரிமேடு, சீலநாயக்கன்பட்டி என மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன் பிறகு விட்டு விட்டு லேசான மழை தூரல் காணப்பட்டது.

    இதேப்போல் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு பரலாக மழை பெய்தது. எடப்பாடி, சங்ககரி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில் அதிகபட்சமாக எடப்பாடி பகுதியில் 32 மி.மீட்டர் மழை பதிவானது.

    தொடர் மழையினால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏரிகள் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் ஏரி, குளங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் காணப்பட்டது. தற்போது இந்த மழையினால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

    ஏற்காட்டில் நேற்று இரவு பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஏற்காட்டில் தொடர் மழையினால் கிளியூர் நீர் வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

    மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையையொட்டி காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். அவர்கள் ஏற்காட்டில் நிலவி வரும் இதமான சீதோஷ்ண நிலையை ரசித்தபடி சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :-

    எடப்பாடி-32 , சங்ககிரி-27, சேலம்-12.90, ஏற்காடு-10.60. பெத்தநாயக்கன்பாளையம்-9, கெங்கவல்லி-6, வீரகனூர்-6, ஆத்தூர்-5, கரியகோவில்-2.

    மாவட்டம் முழுவதும் 110.50 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் ஓடியது.

    கொல்லிமலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகளில் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொல்லிமலை அடிவார பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    இதேபோல் வெண்ணந்தூர் பகுதியில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கி 7 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளிலும், வயல்வெளிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

    ராசிபுரம் பகுதியில் லேசான மழையும், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இரவில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழையும் பெய்தது. மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதேபோல் திம்மநாயக்கன்பட்டி, ஆயில்பட்டி, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை முதல் மாலை கடும் வெயிலால் பொதுமக்கள் வாடினர். பின்னர் மாலை சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மங்களபுரம்-33.20 மி.மீ, புதுச்சத்திரம்-25.30, ராசிபுரம்-26.20, சேந்தமங்கலம்-4, கொல்லிமலை செம்மேடு-27.

    ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 115.70 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • பகல் நேரங்களிலும் அவ்வப்போது பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து செல்கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய மழை 1 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, சித்தூர் உள்பட பல பகுதிகளிலும் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது .

    இதே போல சங்ககிரி, தலைவாசல், ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஆனைமடுவு, மேட்டூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகமாகி கடும் குளிர் நிலவி வருகிறது.

    பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தான் ஏற்காட்டில் கடுமையான குளிர் நிலவும். ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நவம்பர், டிசம்பரில் நிலவுவதை போன்று கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் குளிர் தாங்கும் உடைகளான சொட்டர், ஜர்கின் போன்ற உடைகளை அணிந்து தான் பொதுமக்கள் வெளியே செல்ல முடிகிறது. மழை பொழிவு அதிகமாக இருப்பதால் இங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளது.

    மேலும் மலைப்பாதைகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இதேபோல் பகல் நேரங்களிலும் அவ்வப்போது பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து செல்கின்றன.

    பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சேலம் மாநகரில் நேற்று மதியம் 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது. மேலும் இரவு வரை மழை தூறலாக நீடித்தது. மழையை தொடர்ந்து மாநகர் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 33.2, சங்ககிரி 29, தலைவாசல் 22, ஏற்காடு 15.4, பெத்தநாயக்கன்பாளையம் 14, ஆனைமடுவு 11, மேட்டூர் 10.8, கெங்கவல்லி 10, ஓமலூர்9.4, ஆத்தூர் 3.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 202.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளான செட்டிமாங்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.
    • எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக எடப்பாடி பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை கனமழையாக கொட்டியது.

    இந்த மழை எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளான செட்டிமாங்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளிலும் கனமழையாக கொட்டியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் நிலக்கடலை பயிர் செழித்து வளருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதே போல சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் நேற்றிரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சாரல் மழையாக பெய்தது, மழையை தொடர்ந்து அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 27 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 10.6, மேட்டூர் 3.6, ஓமலூர் 2, தம்மம்பட்டி 2, ஏற்காடு 1, சங்ககிரி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 47.20 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை சுமார் 5 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே உள்ளது.

    இதே போல மேட்டூர், ஆத்தூர், காடையாம்பட்டி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. விவசாய பயிர்களுக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்று மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், 5 ரோடு, 4 ரோடு பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகள் உள்பட பல பகுதிகளில் கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 25.8, ஆத்தூர் 17.20, காடையாம்பட்டி 17, சேலம் 15.2, பெத்தநாயக்கன் பாளையம் 14 , தலைவாசல் 13, ஆனைமடுவு 5, ஓமலூர் 2.4, தம்மம்பட்டி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 144.60 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
    • திங்கட்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சேலம் புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் தலைவாசல் உள்பட பல பகுதகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலத்திலும் நேற்று இரவு 7 மணியளவில் சூறைக்காற்றுடன் லேசான மழை தொடங்கியது. இதனால் கனமழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் சேலம் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. திங்கட்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 43 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி 42, எடப்பாடி 35, மேட்டூர் 34.40, தலைவாசல் 19, ஆத்தூர் 11.60, காடையாம்பட்டி 11, ஓமலூர் 5, சேலம் 2.4, ஏற்காடு 2.2, பெத்தநயாக்கன்பாளையம் 2, கரியகோவில் 1, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 209.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக நீடித்தது.
    • மழையால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 4-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணயளவில் தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக நீடித்தது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் பெய்தது.

    கடந்த சில நாட்களாக சேலம் மாநகரில் மழை பெய்து வருவதால் பல சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மழையை தொடர்ந்து மாநகர் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி தலைவாசல் ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பயிர்களுக் கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக நீடித்தது. இந்த மழையால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. சனிக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 58.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 44, கெங்கவல்லி 40, ஏற்காடு எடப்பாடி 37, தலைவாசல் 37, பெத்தநாயக்கன் பாளையம் 9.4, தம்மம்பட்டி 9, சங்ககிரி 9, சேலம் 8.5, காடையாம்பட்டி 8, ஏற்காடு 7.20, வீரகனூர் 7, ஓமலூர் 5.02, கரியகோவில் 4, ஆனைமடுவு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 286.72 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொல்லி மலை, மோகனூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது . இந்த மழையால் சாலைகள், வயல் வெளிகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 39 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மோகனூர் 31, எருமப்பட்டி, குமாரபாளையம் 4, நாமக்கல் 2.2, ராசிபுரம் 6, சேந்தமங்கலம் 13, திருச்செங்கோடு 2, கலெக்டர் அலுவலகம் 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அந்த பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் ஓடைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக காடையாம்பட்டி, எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, ஏற்காடு, தம்மம்பட்டி, சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    காடையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை கனமழையாக கொட்டியதால் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தீவட்டிப்பட்டி அருகே வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். மேலும் அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடுகிறது. வயல்வெளிகள் உள்பட தாழ்வான பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அந்த பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் ஓடைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை பலத்தகாற்றுடன் இன்று அதிகாலை வரை கன மழையாக கொட்டியது . இந்த மழை மற்றும் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து ஏற்காட்டில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இந்த மின் தடையால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை விடிய, விடிய கன மழையாக கொட்டியது. அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் உள்பட பல பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிச்சிப்பாளையம், பெரமனூர், அம்மாப்பேட்டை உள்பட பல இடங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 167 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி 146, ஓமலூர் 122, சங்ககிரி 94, ஏற்காடு 78.2, தம்மம்பட்டி 75, ஆனைமடுவு 67,கரியகோவில் 62, சேலம் 61.5, பெத்தநாயக்கன்பாளையம் 42, ஆத்தூர் 37.4, கெங்கவல்லி 30, வீரகனூர் 26, மேட்டூர் 19 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 1027.01 மி.மீ.மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • சேலம் மாநகரில் நேற்றிரவு அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக மேட்டூர், கரியகோவிலில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் போர்வையை போர்த்திய படி தூங்கினர்.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 25.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கரியகோவில் 22, சேலம் 15.4, பெத்தநாயக்கன்பாளையம் 13, ஓமலூர் 8.2, காடையாம்பட்டி 2.2, ஏற்காடு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    ×