search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தொடர் மழை: மேட்டூரில் அதிக பட்சமாக 58.6 மி.மீ. கொட்டியது
    X

    கோப்பு படம்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தொடர் மழை: மேட்டூரில் அதிக பட்சமாக 58.6 மி.மீ. கொட்டியது

    • ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக நீடித்தது.
    • மழையால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 4-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணயளவில் தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக நீடித்தது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் பெய்தது.

    கடந்த சில நாட்களாக சேலம் மாநகரில் மழை பெய்து வருவதால் பல சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மழையை தொடர்ந்து மாநகர் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி தலைவாசல் ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பயிர்களுக் கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக நீடித்தது. இந்த மழையால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. சனிக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 58.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 44, கெங்கவல்லி 40, ஏற்காடு எடப்பாடி 37, தலைவாசல் 37, பெத்தநாயக்கன் பாளையம் 9.4, தம்மம்பட்டி 9, சங்ககிரி 9, சேலம் 8.5, காடையாம்பட்டி 8, ஏற்காடு 7.20, வீரகனூர் 7, ஓமலூர் 5.02, கரியகோவில் 4, ஆனைமடுவு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 286.72 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொல்லி மலை, மோகனூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது . இந்த மழையால் சாலைகள், வயல் வெளிகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 39 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மோகனூர் 31, எருமப்பட்டி, குமாரபாளையம் 4, நாமக்கல் 2.2, ராசிபுரம் 6, சேந்தமங்கலம் 13, திருச்செங்கோடு 2, கலெக்டர் அலுவலகம் 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×