search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

    • எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளான செட்டிமாங்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.
    • எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக எடப்பாடி பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை கனமழையாக கொட்டியது.

    இந்த மழை எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளான செட்டிமாங்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளிலும் கனமழையாக கொட்டியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் நிலக்கடலை பயிர் செழித்து வளருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதே போல சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் நேற்றிரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சாரல் மழையாக பெய்தது, மழையை தொடர்ந்து அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 27 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 10.6, மேட்டூர் 3.6, ஓமலூர் 2, தம்மம்பட்டி 2, ஏற்காடு 1, சங்ககிரி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 47.20 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×