search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு- மேட்டூர், கரியகோவிலில் கனமழை
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு- மேட்டூர், கரியகோவிலில் கனமழை

    • சேலம் மாநகரில் நேற்றிரவு அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக மேட்டூர், கரியகோவிலில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் போர்வையை போர்த்திய படி தூங்கினர்.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 25.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கரியகோவில் 22, சேலம் 15.4, பெத்தநாயக்கன்பாளையம் 13, ஓமலூர் 8.2, காடையாம்பட்டி 2.2, ஏற்காடு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×