search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்லூர் ராஜு"

    • அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது
    • அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அதில், பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான் என் அவர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.

    இதனை அடுத்து, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களுடன், வாக்களிப்போம் தாமரைக்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.
    • 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி கழத்தின் சார்பில், பரவையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். பாட்டாளி மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக கட்சியை தொடங்கினார். எடப்பாடி யார் இன்றைக்கு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் உலக அளவில் 7-வது இடத்திலும், இந்திய அளவில் 3-வது இடத்திலும், தமிழகத்தில் முதன்மையாக கழகத்தை உருவாக்கியுள்ளார்.

    தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல என கருணாநிதி கூறினார். ஆனால் ஸ்டாலினை துணை முதலமைச்சர் மற்றும் செயல் தலைவராக நியமித்தார். அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.

    ஸ்டாலின் வளர்ச்சி அடைய 50 ஆண்டுகள் ஆனது. ஆனால் அவரது மகன் உதயநிதி 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். 2019 ஆண்டில் மாநில இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது, 2021-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார். 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 3 சதவீதம் தான் வித்தியாசம். தற்போது தி.மு.க.விற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு, சிறு பான்மை மக்களிடத்தில் அ.தி.மு.க. வரவேற்பு ஆகியவற்றால் பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். பா.ஜ.க. கனவு பகல் கனவாக தான் போகும்.

    புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஸ்டாலின் திரைத் துறை மூலம் கொண்டாடினர். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்றபோதும் வெறும் ஆயிரம் பேர் தான் அதில் பங்கேற்றனர். இதில் பேசிய உச்சநடிகர் எம்.ஜி.ஆர். வளர்ச்சிக்கு கருணாநிதியின் எழுத்து ஆற்றல் உதவியதாக என்று கூறுகிறார்.

    1971-ம் ஆண்டு ஒரு விழாவில் முரசொலி மாறன் பேசும்போது நாங்கள் கடன் வாங்கி இருந்தோம், வட்டி கட்ட முடியவில்லை அப்போது எங்களை காப்பாற்ற எங்கள் தங்கம் படத்தில் புரட்சித் தலைவரும், அம்மாவும் இலவசமாக நடித்துக் கொடுத்தனர். மீண்டும் எங்களுக்கு வாழ்வு கொடுத்தவர் 8-வது வள்ளல் எம்.ஜி.ஆர். என்று கூறினார்.

    அதனை தொடர்ந்து கருணாநிதி பேசும்பொழுது அவர் 8-வது வள்ளல் மட்டுமல்ல, திராவிட கர்ணன் என்று பாராட்டி எனக்கு வாழ்வு தந்தவர் புரட்சி தலைவர் என பேசினார். அப்போது முரசொலி கூட வந்தது என்பதை அங்கு பேசிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செல்லூர் ராஜுக்கு தெர்மாகோல் அடைமொழி ஆகிவிட்டது.
    • என்னையே தெர்மாகோல் ஆக்கி விட்டார்கள் என்றார்.

    சினிமா புகழ், டி.வி. புகழ் என்று சில பிரபலங்களுக்குஅடைமொழி ஒட்டிக்கொண்டு இருப்பது போல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு தெர்மாகோல் அடைமொழி ஆகிவிட்டது. அவர் விட்ட தெர்மாகோல் தண்ணீர் ஆவியாவதை தடுத்ததோ? தடுக்க வில்லையோ? அவரது பெயரோடு அது ஒட்டிக்கொண்டதை மட்டும் தவிர்க்க முடிய வில்லை.

    மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் செல்லூர் ராஜு பேசும்போது, நான் மதுரைக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது தொடர்பாக கேள்வி கேட்டால் என்னை தெர்மா கோலோடு இணைத்து பேசி திசை திருப்புகிறார்கள். தெர்மா கோலுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்? மாவட்டத்தில் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் தெர்மா கோலை விட்டார்கள். நானும் சென்றிருந்தேன் அவ்வளவு தானே?!. அதற்காக என்னையே தெர்மாகோல் ஆக்கி விட்டார்கள் என்றார்.

    • தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.
    • இந்த வரிசையில் விஜய்யும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய்காந்த், சரத்குமார், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜய் தற்போது இணைந்துள்ளார். இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவருக்கு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் ரசிகர்களின் ஆதரவு காரணமாக அவர் அரசியலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஷாலே அரசியலுக்கு வரும்போது.. விஜய் வருவதற்கு என்ன..? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.


    விஜய் -விஷால்

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாரும் அரசியல் செய்யலாம். விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறுகிறார். ஆனால் விஷால் நான்கு, ஐந்து படங்களில் நடித்ததும் நான் தான் அடுத்த முதல்வர் என்று கட்சி ஆரம்பித்தார். ஆனால் அந்த கட்சி எங்கு போனது என்று தெரியவில்லை.

    கமல்ஹாசன் கூட கட்சி ஆரம்பிக்கும் போது மக்கள் நீதி மய்யம் என்று கூறினார். ஆனால், தற்போது நீதி ,மய்யம் எல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. விஜய்யின் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இளைஞர்களை அவர் ஈர்த்துள்ளார். அவர் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.

    ×