என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க - செல்லூர் ராஜு
- அதிமுக கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை.
- அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அதிமுக காரங்க எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டாங்க.. இதுல அடுத்த கட்சிக் கொடியைப் பிடித்து ஆட்டுவோமா? அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி கொடியை பிடித்ததாக வரலாறே கிடையாது. தவெக கொடியை தூக்கி பிடிக்கும் அளவிற்கு அதிமுகவினர் இழிபிறவிகள் அல்ல" என்று தெரிவித்தார்.






