search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னையில் மகாசிவராத்திரி சிறப்பு ஏற்பாடுகள்"

    • மாசி மாதம் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழா.
    • பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப் படுகிறது. சிவபெருமான் - பார்வதி தேவியின் திருமணத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருள் மற்றும் அறியாமை நீங்கி ஒளி பெறுவதை நினைவூட்டும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சிவபெருமானை தியானித்து விரதம் இருப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகத்தை காண்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது.

    சிவன் கோவில்களில் நாளை மாலை தொடங்கும் முதல் கால பூஜை படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. 2-ம் கால பூஜை காத்தல் தொழிலை செய்யும் திருமால், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. 3-ம் கால பூஜை சக்தி வடிவமான அம்பாள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது.

    4-ம் கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூதகணங்கள், மனிதர்கள், பிற உயிரினங்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. இந்த மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடித்து சிவபெருமானை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சி அடையலாம்.

    அதன்படி இந்த ஆண்டு நாளை (8-ந்தேதி) மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நாளை மகா சிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

     மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை யொட்டி நாளை மாலை முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய 4 கால பூஜை கள், சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.

    மகா சிவராத்திரி விழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். மேலும் ஆன்மிக சொற்பொழி வுகள், இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     வடபழனி வேங்கீஸ்வரர் கோவில்

    சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்தி ரியையொட்டி நாளை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு இரவு 9மணி தொடங்கி அதிகாலை 4 மணி வரை நான்கு கால பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியில் அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

     கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

    கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மாலையில் பிர தோஷ அபிஷேக பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. பிரதோ ஷம் மற்றும் சிவராத்திரி என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிக ரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிச னம் செய்திடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

     பாடி திருவல்லீஸ்வரர் கோவில்

    பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் நாளை காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. மேலும் நாளை இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4.30 மணிக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இரவு முழு வதும் கோவில் வளாகத்தை சுற்றி பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகி யவை நடைபெறுகின்றன.

     திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவில்

    திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி முதல் கால பூஜை நாளை இரவு 9 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 11 மணிக்கும், 3-ம் கால பூஜை இரவு 2 மணிக்கும், 4-ம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடக்கிறது. இந்த நான்கு காலபூஜையும் ஆலயத்தின் வாயு பாகத்தில் இருக்கும் திருவொற்றிஸ்வர பெருமானுக்கு நடைபெறும். ஆதிபுரிஸ்வர பெருமானுக்கு இரவு 11 மணிக்கு சங்கபி ஷேகம் நடைபெறுகிறது.

    இதேபோல் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நாளை மாலை முதல் நான்கு கால பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறு கிறது. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி களும் நடக்கிறது.

    ×