search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 Time Pooja"

    • மாசி மாதம் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழா.
    • பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப் படுகிறது. சிவபெருமான் - பார்வதி தேவியின் திருமணத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருள் மற்றும் அறியாமை நீங்கி ஒளி பெறுவதை நினைவூட்டும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சிவபெருமானை தியானித்து விரதம் இருப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகத்தை காண்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது.

    சிவன் கோவில்களில் நாளை மாலை தொடங்கும் முதல் கால பூஜை படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. 2-ம் கால பூஜை காத்தல் தொழிலை செய்யும் திருமால், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. 3-ம் கால பூஜை சக்தி வடிவமான அம்பாள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது.

    4-ம் கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூதகணங்கள், மனிதர்கள், பிற உயிரினங்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. இந்த மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடித்து சிவபெருமானை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சி அடையலாம்.

    அதன்படி இந்த ஆண்டு நாளை (8-ந்தேதி) மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நாளை மகா சிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

     மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை யொட்டி நாளை மாலை முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய 4 கால பூஜை கள், சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.

    மகா சிவராத்திரி விழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். மேலும் ஆன்மிக சொற்பொழி வுகள், இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     வடபழனி வேங்கீஸ்வரர் கோவில்

    சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்தி ரியையொட்டி நாளை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு இரவு 9மணி தொடங்கி அதிகாலை 4 மணி வரை நான்கு கால பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியில் அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

     கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

    கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மாலையில் பிர தோஷ அபிஷேக பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. பிரதோ ஷம் மற்றும் சிவராத்திரி என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிக ரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிச னம் செய்திடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

     பாடி திருவல்லீஸ்வரர் கோவில்

    பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் நாளை காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. மேலும் நாளை இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4.30 மணிக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இரவு முழு வதும் கோவில் வளாகத்தை சுற்றி பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகி யவை நடைபெறுகின்றன.

     திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவில்

    திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி முதல் கால பூஜை நாளை இரவு 9 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 11 மணிக்கும், 3-ம் கால பூஜை இரவு 2 மணிக்கும், 4-ம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடக்கிறது. இந்த நான்கு காலபூஜையும் ஆலயத்தின் வாயு பாகத்தில் இருக்கும் திருவொற்றிஸ்வர பெருமானுக்கு நடைபெறும். ஆதிபுரிஸ்வர பெருமானுக்கு இரவு 11 மணிக்கு சங்கபி ஷேகம் நடைபெறுகிறது.

    இதேபோல் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நாளை மாலை முதல் நான்கு கால பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறு கிறது. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி களும் நடக்கிறது.

    • சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும்.
    • வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேராக பார்த்திருக்கிறாள்.

    `அந்த காலத்துல ராமபிரான் வனவாசம் செஞ்ச தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்துல கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த பொய்கைக்குக் கலசரஸ்னு பேரு. அந்த குளத்தோட கரையிலே நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டாங்க. அவங்களில் ஒருத்தர்தான் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கவுஸ்திமதி ரிஷின்னு ஒருத்தர் வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார்.

    `இந்த சின்ன வயசுல நீங்க துறவியா இருக்கறது கொஞ்சம் கூட சரியில்ல. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா...! முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால்தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்'னு வித்வஜிஹ்மர்கிட்ட கேட்டார்.

    `சம்சாரங்கர பந்தத்துல அகப்பட்டு என்னோட வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தைன்னு கஷ்டப்படுறத விரும்பாமல் தானே நானே என்னோட அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்யறேன். ஆனாலும் என்னோட கர்மா விடமாட்டேங்குதே' என்றார் வித்வஜிஹ்மர்.

    `நமக்கு தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்...! நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செஞ்சிருக்காங்க. சுப்ரமணியனும் விநாயகனும், ஐயப்பனும் கூட மணம்புரிந்து மனைவியோடு வீற்றிருக்கிறார்கள்.

    உங்க பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் உருவாகியிருக்க முடியுமா? அதோட என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கவுதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா அவங்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி. அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏத்துக்குங்க!' அப்படின்னார். அதுக்கு `மார்க்கண்டேயர், துர்வாசர், சனக் குமாரர்கள், கண்வமகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையா?

    அவங்க ஏன் கல்யாணம் செய்யாம வாழ்ந்தாங்க? அதுக்கான சரியான காரணத்தை நீங்கள் எனக்கு சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்'னு சொன்னார் வித்வஜிஹ்மர்.

    கவுஸ்மதி முனிவர் தன்னோட தவ வலிமைய பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்விகளைக் கேட்டார்.

    அதற்கு நாராயணன் `நாரதனும் ஒருசமயம் என்னோட மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின்னு ஒருத்தியோட கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கான். ஸ்ரீமதியோட சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான்.

    அதேபோல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனோட சாபத்தை பெற்றிருக்காங்க. காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தாங்க. பெண் குழந்தைகளை வளர்ப்பது கஷ்டம்னு அவங்க ஒருநாளும் நினைக்கலையே...! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார்.

    துர்வாசரும் குந்திதேவிக்கு குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களை தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா...?

    மகாலட்சுமியோட கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம்னு பிரம்மா நினைச்சார். லட்சுமி இதை விரும்பாத காரணத்தினால் நான்தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார் என்று போய் ஜிஹ்மர்கிட்ட சொல் அவர் வசுமதியைக் கல்யாணம் செய்ய சம்மதம் சொல்வார் என்று சொல்லி அனுப்பினார்.

    பூலோகத்துக்குத் திரும்பிய கவுஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மர்கிட்ட அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது.

    கவுஸ்திமதி ரிஷி, மகளைவிட்டுப் பிரியும்போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறினார். வித்வஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள்.

    அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராகப் பார்த்திருக்கிறாள்.' சிவராத்திரி அன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.
    • நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூனுறு செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும். சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    அன்று இரவு பதினான்கு நாழிகையின் போது முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.

    சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்வித பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    சிவராத்திரியின் முதல்நாள் பிரதோஷ தினம் ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும்.

    சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடை பெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.

    நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும். மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்ப வரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ சகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்க புராண திருக்குறுந்தொகை யையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று பரஇதிகாசம் உரைக்கிறது.

    சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

    நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும். நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்ப லாகும். தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

    கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும். வழிபடும் போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெற வேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது.

    சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும். வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்தி ரப் பாடல்களை பாட வேண்டும்.கோவிலுக்கு செல்வோர் முக்கிய மாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனு கிரகமும் உண்டாகும்.

    ×