search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தின விழா"

    • கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    சாயல்குடி

    கடலாடி மற்றும் சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா துணை சேர்மன் ஆத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்ஒன்றிய மேலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சை, செய்யது ராவியா, சேதுபாண்டி, குஞ்சரம் முருகன், ராமலட்சுமி ,அதிமுக கடலாடிஒன்றிய விவசாய அணி தலைவர் சண்முக போஸ் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர் சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார் துணை சேர்மன்மணிமேகலை பாக்கியராஜ் இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சாயல்குடி பேரூராட்சிதலைவர் மாரியப்பன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் சாயல்குடி காவல் நிலையத்தில் எஸ்ஐ சல்மோன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் கடுகு சந்தை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் காளிமுத்து தேசிய கொடி ஏற்றினார் எஸ். வாகைக் குளம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி வடமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கண்டிலான் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம் தேசிய கொடி ஏற்றினார் காணிக்கூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் தென்னரசி செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் இதம் பாடல்ஊராட்சியில் தலைவர் மங்களசாமி மேலச் செலவனூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மகர ஜோதி கோபாலகிருஷ்ணன் கொத்தங்குளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கணேசன் கடலாடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராஜபாணிக்கம் லிங்கம் சிக்கல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன் மேலச்சிறுபோது ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சம்சாத் பேகம் முகம்மது ரபிக்,ஓரிவயல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மலர்மதி திருப்பதி வேப்பங்குளம் ஊராட்சி மில் ஊராட்சி தலைவர் முருகன் பிள்ளையார் குளம் வளர்ச்சி ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் செஞ்சடைநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லிங்கராஜ் எஸ் தரைக்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முனியசாமி கன்னிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் செவல்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சொரிமுத்து நரிப்பையூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் நாராயணன் எஸ். கிரந்தை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பீ.கீரந்தை ஊராட்சியில் ஊராட்சித் தலைவர்ஆனந்தம்மாள் அற்புதராஜ் கீழச்செல்வனூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் முகம்மது இக்பால் வாலிநோக்கம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பீர் முகம்மது, மேலக் கிடாரம்ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கவிதா அய்யனார் பெரியகுளம் ஊராட்சி ஊராட்சி தலைவர் முத்துமாரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரவீந்திர நாதன் மாரியூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் ஒப்பிலான் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் அப்துல் ஹக்கீம் கீழக்கிடாரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மீனாள்தங்கையா ஏனாதி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாரதிராஜா பொதிகுளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லட்சுமி திருவாப்பு ஒருவானேந்தல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    • இந்தியா 75 ஆண்டு நிறைவு பெற்றதை சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
    • பெசன்ட் நகர் பீச்சில் ஃப்ரெண்ட்ஸ் குருப் சார்பாக தேசிய கொடி ஏற்றி மரியாதை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெற்றதை சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர். இதுதவிர, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.

     

    அந்த வகையில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குருப் சார்பில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது இவ்விழாவில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குருப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • எதிர்கால திட்டங்கள் குறித்து துறைமுக பொறுப்பு கழக தலைவர் விளக்கம்.
    • மீனம்பாக்கம் விமான சரக்கு முனையத்தில் சுதந்திர தின விழா.

    சென்னை துறைமுகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தண்டையார் பேட்டையில் உள்ள சென்னை துறைமுக வீட்டு வசதி காலனியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில், துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பானிவால் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது பேசிய அவர், துறைமுகத்தின் எதிர்கால திட்டங்கள், சாதனைகள், ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கினார். கப்பல் போக்குவரத்துத்துறை துறைமுகத்தின் முன்னேற்றத்திற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

    சென்னை விமான நிலைய சுங்கத்துறை சார்பில், மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்கக வளாகத்தில் சுதந்திர தின விழா, இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் கே ஆர் உதயபாஸ்கர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அணி வகுப்பு மரியாதையையும், முதன்மை ஆணையர் ஏற்றுக்கொண்டார்.

    • புராதன சின்னங்களை கௌரவிக்கும் வகையில் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று கூடி, தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
    • இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை சேர்ந்த 15 வயது முதல் 60 வயதுடைய 350 பேர் கலந்து கொண்ட சுதந்திர தின மாரத்தான் போட்டி பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை 6.மீ, தூரத்திற்கு நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை தமிழக அரசு "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக" மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி வருகிறது. மாமல்லபுரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வீடுதோறும் தேசியக்கொடி இலவசமாக கொடுக்கப்பட்டது.

    புராதன சின்னங்களை கௌரவிக்கும் வகையில் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று கூடி, தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

    இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை சேர்ந்த 15 வயது முதல் 60 வயதுடைய 350 பேர் கலந்து கொண்ட சுதந்திர தின மாரத்தான் போட்டி பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை 6.மீ, தூரத்திற்கு நடத்தப்பட்டது.

    மாரத்தான் போட்டியை மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம், மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், தொல்லியல்துறை, தீயணைப்பு துறை, மாமல்லபுரம் பேரூராட்சி, காவல்துறை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    • 75-வது சுதந்திர தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    • பல்வேறு துறைகளின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பை ஏற்று 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த 75-வது சுதந்திர தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

    மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 20 காவலர்களுக்கு பதக்கமும் நற்சான்றிதழ் வழங்கினர். மேலும் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் சீப்பாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயகுமார், சப்-கலெக்டர் மகாபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, ஜேசுதாஸ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவர்ஷன் வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ராஜலஷ்மி, துணைப் போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    இதேபோல் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    • தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்புள்ள கொடி கம்பத்தில் காலை 8 மணிக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
    • டி.ஆர்.பாலு எம்.பி. அமைச்சர் சேகர்பாபு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பூச்சி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    இந்தியாவில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா அரசியல் கட்சி அலுவலகங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்திபவன் தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இன்று காலையில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள தியாகி சத்தியமூர்த்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து அங்குள்ள 150 அடி உயர கொடி கம்பத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் சுதந்திர தின உரையாற்றினார்.

    விழாவில் முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, தாமோதரன், சி.டி.மெய்யப்பன், பொன்கிருஷ்ண மூர்த்தி, ரங்கபாஷ்யம், ஆர்.வி.சிவராமன், கீழானூர் ராஜேந்திரன், எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி, மாவட்ட தலைவர்கள் ரஞ்சன்குமார், சிவராஜசேகரன், எம்.ஏ. முத்தழகன், டில்லிபாபு, எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத், துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாடு சுதந்திரம் அடைந்த அன்று இரவு 12 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் முன்பு காமராஜர் தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார். அதன் நினைவாக 19.8.1947 அன்று கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. அந்த கொடிக்கம்பத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் நள்ளிரவு கொடி ஏற்றப்படுகிறது.

    இந்த ஆண்டும் நேற்று இரவு 12 மணிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் தலைமையில் காங்கிரசார் தேசிய கொடி ஏற்றினார்கள்.

    தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்புள்ள கொடி கம்பத்தில் காலை 8 மணிக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    டி.ஆர்.பாலு எம்.பி. அமைச்சர் சேகர்பாபு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பூச்சி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தேசிய கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து இனிப்பு வழங்கினார்.

    பாரத மாதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, டாக்டர் ஹண்டே, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

    இதில் மாநில நிர்வாகிகள் சக்திவேல், திருவேங்கடம், ஜி.ஆர். வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, ராணி கிருஷ்ணன், ராஜம் எம்.பி.நாதன், நாகராஜன், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாட்சா, கோவிந்த சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அவரது வீட்டின் முன்பு தேசிய கொடியேற்றினார்.

    ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தேசிய கொடியேற்றினார்.

    தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசிய கொடியேற்றினார். அதைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    சென்னை போக் ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேசிய கொடியேற்றினார். மாநில செயலாளர் முத்தரசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மேயர் சுஜாதா தேசிய கொடி ஏற்றினார்
    • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    வேலூர்

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேயர் சுஜாதா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மாநகராட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், துணை மேயர் சுனில் குமார், மண்டல குழு தலைவர்கள் புஷ்பலதா வன்னிய ராஜா, நரேந்திரன், யூசுப் கான், மாநகராட்சி நியமன குழு உறுப்பினர் கணேஷ் சங்கர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சுதந்திர தின விழாவையொட்டி மாநகராட்சி அலுவலகம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் மாநகராட்சி அலுவலகம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    மேலும் மாநகராட்சி வளாகம் முழுவதும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களிலும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மண்டல குழு தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    விழுப்புரத்தில் சுதந்திர தின விழா 198 பேருக்கு ரூ.1.69 கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மோகன் வழங்கினார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில், இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது.இதையொட்டி, விழா மைதானத்திற்கு காலை 9 மணிக்கு கலெக்டர் மோகன் வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வரவேற்றார். சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதை தொடர்ந்து, ஆட்சியர் மோகன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர், வனத்து றையினர், ஊர்க் காவல் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.இதனை தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 198 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 66 லட்சத்து 85 ஆயிரத்து 465 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மாவட்ட அளவில் அரசின் பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், ரவிக்குமார்எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயசந்திரன், விழுப்புரம் நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவனது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவள்.
    • பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார்.

    சென்னை:

    சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மாபெரும் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றும்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக நான் அடையும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும்-தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

    இந்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.

    * 1600-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் 'ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது' என்று 1755-ம் ஆண்டு சொன்னவன் நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன்.

    * மண்டியிடாத மானப் போர் புரிந்த மாவீரன் கான்சாகிப் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764.

    * 'தானம் கேள் தருகிறேன், வரி என்று கேட்டால் தரமாட்டேன்' என்று சொன்ன மாவீரன்தான் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799.

    * கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவனது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவள்.

    * பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார்.

    * தனது உடையில் நெருப்பை வைத்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் தாக்குதல் நடத்தியவள் குயிலி.

    * சின்னமருதுவும், பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்பு வளரியால் வாகை சூடியவர்கள். இன்றும் வரலாற்றில் பெரும் மலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை. அந்த மாவீரன் தூக்கு மேடைக்கு சென்ற ஆண்டு 1805!

    அவரது போர்ப்படையிலும் ஒற்றர்படையிலும் செயல்பட்ட தளபதி பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    நான் சொன்னவை அனைத்தும் 1857-ம் ஆண்டுக்கு முன்பே நடந்தவை.

    1857 சிப்பாய் புரட்சியைத் தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில், அதுவும் தமிழ்நாட்டில் நடந்தவைதான் இவை.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    • காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் மண்டல இணை பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.

    காஞ்சிபுரம்:

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் தேசியக் கொடியினை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து ரூ.1 கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, முதன்மை கல்வி அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் மண்டல இணை பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

    செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறந்த காவலருக்கான மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை மாவட்ட நீதிபதி காயத்ரி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமார், செயலாளர் மகேஷ் குமார், பொருளாளர் பிரேம் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். நகர மன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டார். பின்னர் அவர் போலீசரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

    மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 20 காவலர்களுக்கு பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கினார். இதேபோல் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் போலீஸ் சூப்பிரெண்ட் சீப்பாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் , மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயகுமார், சப்- கலெக்டர் மகாபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, ஜேசுதாஸ்,, வட்டாட்சியர் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமாரும், திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமியும் தேசியக் கொடியை ஏற்றினர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ரவி தேசிய கொடி ஏற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், வல்லூர் ஊராட்சியில் தலைவர் உஷா ஜெயகுமார், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர்பாபு, பஞ்சட்டி ஊராட்சியில் தலைவர் சீனிவாசன், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், தாங்கள் பெரும்புலம் ஊராட்சியில் தலைவர் ஞானவேல், கோலூர் ஊராட்சியில் தலைவர் குமார், பிரளயம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் இலக்கியா கண்ணதாசன், ஆவூர் ஊராட்சியில் தலைவர் டில்லி பாபு ஆகியோர் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

    மாமல்லபுரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வீடுதோறும் தேசியக்கொடி இலவசமாக கொடுக்கப்பட்டது.

    அர்சுனன்தபசு அருகே தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று திரண்டு தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

    பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை சுதந்திர தின மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதனை இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம், மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், தொல்லியல்துறை, தீயணைப்பு துறை, மாமல்லபுரம் பேரூராட்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    ஊத்துக்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தேசிய கொடியை ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரமேஷ் கொடியேற்றினார். இதில் சிறப்பு தாசில்தார் லதா, துணை தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் மாலா, துணைத்தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா 321 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.
    • சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் சமாதான புறாக்கை பறக்கவிட்டு, மூவர்ண கலரில் பலூன்கள் பறக்கவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரின் மனைவி சாந்தி பிரியா ஷ்ரவன் குமார் கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை 2-பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10- பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 10 துறைகளைச் சேர்ந்த 321 பயனாளிகளுக்கு 1 கோடி ரூ.43 லட்சத்து 27 ஆயிரத்து 930 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளிட்ட 37 துறைகளைச் சார்ந்த 174 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா, திட்ட இயக்குனர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
    • கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, துணை மேயர் மகேஸ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.

    தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இனிப்புகள் வழங்கி மக்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தினவிழா களைகட்டி காணப்பட்டது.

    சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மனுநீதி சோழன் சிலை அருகே உள்ள கொடிகம்பத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மூத்த நீதிபகள் துரைசாமி, டி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஐகோர்ட்டில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு தலைமை நீதிபதி தங்க பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

    சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, துணை மேயர் மகேஸ்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    மாநகர போக்குவரத்து கழக பல்லவன் இல்ல வளாகத்தில் மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

    ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் டீன் தேரணிராஜன், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டீன் பாலாஜி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் டீன் சாந்தி மலர், பல்நோக்கு மருத்துவமனையில் இயக்குனர் விமலா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர்.

    தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆணையர் இளங்கோவன், பொறியாளர் முருகேசன், மக்கள் நல அதிகாரி பார்த்திபன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். வீட்டு வசதி துறை மேலாண்மை இயக்குனர் சுன்சோங்கம் ஜடக் சிரு, செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சரவண மூர்த்தி, தலைமை பொறியாளர்கள் கமலக்கண்ணன், சரவணன், தலைமை வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ராஜலட்சுமி, பர்கத் பேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதேபோன்று அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    தேனாம்பேட்டையில் உள்ள இந்திய தணிக்கை அலுவலகத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    ×