search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை துறைமுகம்"

    • 142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது.
    • பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இத்துறைமுகம் இருந்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த நிதி ஆண்டில் ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவாக முடித்திட அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் ரூ.1400 கோடி மதிப்பீட்டிலான பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு முன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களின் தரவுகள் மூலம் தமிழகத்துக்கான வானிலை கணிக்கப்படுகிறது.
    • இதில் சென்னை துறை முகத்தில் உள்ள ரேடார் பிரதான ரேடாராக உள்ளது. இது ‘எஸ்’ பேண்ட் வகையைச் சேர்ந்ததாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் மழை பற்றிய தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    இந்த மழை பற்றிய தகவல்களை கணிக்க பயன்படுவதில் ரேடார் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மழை மேகங்களின் தன்மை, மேகங்களின் நகரும் திசை, மேகங்கள் கொடுக்க வாய்ப்புள்ள மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    இந்த ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின்காந்த அலைகள் மூலமாக கிடைக்கும் தரவுகள் மூலம் குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு, தற்போதைய மழை நிலவரம் போன்றவற்றை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.

    இதன் மூலம் மாநகராட்சி, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அரசு துறைகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் இந்த வானிலை எச்சரிக்கை அறிவிப்பை கேட்டு அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிட்டு வருகிறார்கள்.

    வானிலை தொடர்பான ரேடார் படங்கள் வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. http://mausam.imd.gov.in என்ற இணைய தளத்தில் இதை பொதுமக்கள் பார்த்து வருகிறார்கள்.

    தற்போது சமூக வலைதளங்கள் அதிகரித்துள்ளதால் ரேடார் படங்களை பயன்படுத்தி தனியார் வானிலை ஆர்வலர்கள் வானிலையை கணித்து பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்றவற்றில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் மத்தியிலும் வானிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய இணைய தளத்தில் ரேடார் படங்களை பொதுமக்களே நேரடியாக பார்த்து தற்போதைய வானிலையை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

    சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களின் தரவுகள் மூலம் தமிழகத்துக்கான வானிலை கணிக்கப்படுகிறது.

    இதில் சென்னை துறை முகத்தில் உள்ள ரேடார் பிரதான ரேடாராக உள்ளது. இது 'எஸ்' பேண்ட் வகையைச் சேர்ந்ததாகும். இந்த ரேடார் சுமார் 400 கிலோ மீட்டர் சுற்றளவு வரை மழை மேகங்களை கண்காணிக்கும் திறன் உடையது. இந்த ரேடார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் பழுதடைந்தது. இந்த ரேடாருக்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால் பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுமார் 4 ஆண்டுகளாக இந்த ரேடார் செயல்படாமல் இருந்தது.

    இதை பழுது பார்ப்பதா? அல்லது புதிதாக வாங்குவதா? என்று டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தலைமையகம் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரேடாரை பழுது பார்ப்பதும் தள்ளிப் போடப்பட்டது.

    எனவே தற்போதைய மழை நிலவரங்களை வானிலை ஆய்வு மையமும், பொதுமக்களும் அறிவதில் சிக்கல் ஏற்பட்டது. பல நேரங்களில் கணிக்க முடியாத அளவுக்கு பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள ரேடாரை பழுது பார்க்கும் பணி முடிவடைந்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த ரேடார் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    • எதிர்கால திட்டங்கள் குறித்து துறைமுக பொறுப்பு கழக தலைவர் விளக்கம்.
    • மீனம்பாக்கம் விமான சரக்கு முனையத்தில் சுதந்திர தின விழா.

    சென்னை துறைமுகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தண்டையார் பேட்டையில் உள்ள சென்னை துறைமுக வீட்டு வசதி காலனியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில், துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பானிவால் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது பேசிய அவர், துறைமுகத்தின் எதிர்கால திட்டங்கள், சாதனைகள், ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கினார். கப்பல் போக்குவரத்துத்துறை துறைமுகத்தின் முன்னேற்றத்திற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

    சென்னை விமான நிலைய சுங்கத்துறை சார்பில், மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்கக வளாகத்தில் சுதந்திர தின விழா, இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் கே ஆர் உதயபாஸ்கர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அணி வகுப்பு மரியாதையையும், முதன்மை ஆணையர் ஏற்றுக்கொண்டார்.

    ×