search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார பணிகள்"

    • சர்க்கரை நோயினாலும் பாதிக்கப் பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்து மாவட்டங்க ளிலும் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழக பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழகம் முழுவதும் 18 முதல் 69 வயதுடைய மக்களிடையே நடத்தப்பட்ட களஆய்வின் இறுதி அறிக்கையின்படி, 23.4 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தினாலும், 7.1 சதவீதம் பேர் சர்க்க ரை நோயினாலும், 10.5 சத வீதம் பேர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினாலும் பாதிக்கப் பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையின ரை பாதிப்பிலிருந்து காத்தி டும் பொருட்டு, தமிழக சுகாதாரதுறை சார்பில் வருகிற 4.11.2023 அன்று முதல்- அமைச்சர் நடப் போம் நலம் பெறு வோம் திட்டத்தை தொடங்கி வைக்க வுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

    அதன்படி கள்ளக்குறிச்சி சுகாதாரதுறை சார்பில், 4.11.2023 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திலிருந்து தொடங்கி கச்சிராப்பாளை யம் சாலையில் குதிரைச்சந் தல் பஸ் நிறுத்தம் வரை 4 கி.மீ தொலைவிற்கு நடந்து சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடையும் நடைபயிற்சி யினை தொடங்கி வைக்க உள்ளனர். இத்திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலை மையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடை பெற்றது. இதையொட்டி நடப்போம் நலம்பெறு வோம் திட்டம் குறித்து மாவட்ட நடைப்பயண குழுவின் ஆலோசனைபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராஜா கள ஆய்வு மேற்கொண்டதன்படி நடைபயிற்சிக்கான பாதை முடிவு செய்யப்பட்டது.

    நடப்போம் நலம்பெறு வோம் திட்டத்தில் பொது மக்கள் தங்களது உடல்நலம் காக்கும் பொருட்டு நடை பயிற்சி மேற்கொள்ள முன்வர வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தன்னார்வத்தோடு இதில் கலந்து கொண்டு இதய நோய், ரத்தழுத்த நோய், நீரிழிவு நோய், மன அழுத்த நோய் போன்ற வற்றிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    • ரூ.57 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழு தலைவர் தெரிவித்தார்.
    • ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிட கூட்டரங்கில் நடைபெற்றது.

    காங்கயம்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிட கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் 15-வது நிதி்க்குழு திட்டத்தில் காங்கயம் வட்டார வளர்ச்சிக்கு ரூ.68 லட்சத்தில் பள்ளி சீரமைப்பு, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.மேலும் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ.57 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழு தலைவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குடிநீர்க் குழாய்கள் மேம்படுத்துவது, கிணற்று மின்மோட்டார் பழுது நீக்குதல், ஒன்றியத்திக்குப்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் ஊதியம், சுகாதார உபகரணங்கள் வாங்குதல், காங்கயம் ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக 3 ஆண்டுகளுக்கு மாத வாடகைக்கு ஒப்படைத்தல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்தக்கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • நுழைவாயில் திறக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் கட்டப்பட்டது. விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

    புதிய கட்டிடத்தையும் நுழைவாயிலையும் கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    உடன் டாக்டர்.செந்தில் , நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகரில் கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.இதையடுத்து, தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது, சாக்கடைக் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.  

    • சுகாதார பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.
    • தேனி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் ராஜவாய்க்கால் தூர்வாருதல் உள்பட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், துணைத்தலைவர் செல்வம், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகராட்சி பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாலமுருகன், நாராயண பாண்டியன், கடவுள், பிரிட்டிஷ் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது 42 கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டது.

    தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுகாதாரம் குடிநீர், சாலை வசதி உள்பட அடிப்படை பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்கள்.

    அப்போது சுகாதார பணிகளை தொய்வின்றி சீராக செய்வதற்கு வார்டு வாரியாக மாஸ் கிளீனிங் செய்யலாம் என எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்குமாறு எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

    இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக தங்களது வார்டுகளில் அங்கன்வாடி மையம், ரேசன் கடை, சமுதாயகூடம், கழிப்பிட வசதி, உயர்கோபுர மின்விளக்கு, தெரு மின்விளக்கு, சாலை பராமரிப்பு, குடிநீர் வசதி, மற்றும் தேனி மீறுசமுத்திர கண்மாய் பகுதியில் நடைபாதை மற்றும் படகு சவாரி ஏற்படுத்துதல், தேனி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் ராஜவாய்க்கால் தூர்வாருதல் உள்பட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    இதில் 33-வது வார்டு கவுன்சிலர் கடவுள் தனது வார்டு பகுதியில் உள்ள வள்ளுவர் வாசுகி காலனி பகுதியில் உள்ள 200 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் கவுன்சிலர்களின் கோரிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ள கூடிய பணிகள் முதற்கட்டமாக நிறைவேற்றவும், அதன் பின்னர் இதர கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×