search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தைகள்"

    • வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.
    • வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப் பகுதியை ஒட்டியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.

    மேலும் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பரிதாப மாக இறந்தார். அடுத்தடுத்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    வனவிலங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரி அருகே நெல்லிப்பொயில் என்ற பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளது.

    அந்த பகுதியில் 3 சிறுத்தை புலிகள் உலாவியபடி இருந்திருக்கிறது. அகனம் பொயில் பகுதியில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் 3 சிறுத்தைப்புலிகள் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுத்தைப்புலிகள் எங்கு பதுங்கி இருக்கின்றன? என்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • திருமாவளவன் எம்.பி. இன்று மாலை திறந்து வைக்கிறார்
    • மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார்.

    நாகர்கோவில்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே சண்முகா தெருவில் இன்று (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார். புதிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திறந்து வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கம் முன்பு மணிப்பூர் மாநில மக்களுக்கு நீதி வழங்கக்கோரி நடைபெறும் சிறப்பு மாநாட் டில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. புதிய அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

    • காட்டின் நடுவே வனத்துறையினர் ரோந்து
    • விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் விவசாயி இவருக்கு சொந்தமாக பசு மாடுகள் உள்ளன. இன்று காலையில் வெங்கடேசனின் பசுமாடு ஒன்று வனப்பகுதியை ஒட்டி உள்ள புத்துக்கோவில் பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தது.

    காட்டுக்குள் இருந்து வந்த 2 சிறுத்தைகள் பசு மாட்டை கடித்து இழுத்து சென்றன. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அங்கு சென்றனர். அவர்கள் கூச்சலிட்டதால் சிறுத்தைகள் தப்பி ஓடி விட்டன. இந்த சம்பவத்தில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.

    குடியாத்தம் அடுத்த சைனகுண்டா, கொட்டமிட்டா பகுதிகளில் குடியாத்தம் கல்லப்பாடி காப்புக் காடுகள் மற்றும் வீரிசெட்டிபல்லி காப்புக் காடுகள் பகுதியில் காட்டின் நடுவே வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காட்டின் நடுவே வன ஊழியர்கள் தங்கி இருக்கும் கொட்டகை அருகேயும் சிறுத்தைகள் உலவுவதாகவும், வனத்துறையினரின் கொட்டகையில் சிறுத்தைகள் படுத்து இருப்பதாகவும் மேலும் வன ஊழியர்களுக்கு சற்று சில மீட்டர் தொலைவு வரை வந்து சிறுத்தைகள் செல்வதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த மாதம் சைனகுண்டா பகுதியில் சிறுத்தைகள் 2 மேய்ச்சலுக்குச் சென்ற 2 கன்று குட்டிகளை கொன்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடுகளை சிறுத்தைகள் கடித்து குதறி கொன்றது.

    தொடர்ந்து சிறுத்தைகள் கால்நடைகளை கடித்துக் கொன்று வருவதால் விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    • கிராம மக்கள் அதிர்ச்சி
    • வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப் பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது, வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.

    யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார்ஏரி மற்றும் வலசை பகுதியில் பாறைகள் மீது பெரிய சிறுத்தைகள் 2 படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதை கண்ட ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

    சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.

    குடியாத்தம் கல்லப்பாடி காப்புக் காடுகள் மற்றும் வீரிசெட்டிபல்லி காப்புக் காடுகள் பகுதியில் காட்டின் நடுவே வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொகிலி, கோவிந்தன், சுந்தரேசன் இவர்களுக்கு சொந்தமான ஆடுகள் காலையில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலையில் அவர்களின் வீட்டில் உள்ள பட்டிக்கு வந்து சேரும் சைனகுண்டா கிராமம் ஆந்திர தமிழக எல்லையில் வனப்பகுதி ஒட்டியபடி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் சிறுத்தைகள் சைனகுண்டா கிராமத்திற்குள் புகுந்து மொகிலி மற்றும் கோவிந்தனின் ஆடுகளை கடித்து குதறி உள்ளது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் வருவதற்குள் சிறுத்தைகள் தப்பி ஓடியுள்ளன. தப்பி ஓடிய சிறுத்தைகள் அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவருடைய ஆட்டை கடித்து வனப்பகுதியில் இழுத்துச் சென்றுள்ளது சிறுத்தைகள் கடித்த மொகிலி மற்றும் கோவிந்தன் ஆடுகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தன.

    மாலை வேலைகளிலே கிராமத்திற்கு நுழைந்து ஆடுகளை வேட்டையாடிய சம்பவத்தால் சைனகுண்டா கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் சிறுத்தைகள் புகும் அபாயம் உள்ளதாகவும் அச்சப்ப டுகின்றனர்.சைனகுண்டா பகுதியில் வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது வனத்துறையின் ஓய்வு விடுதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊருக்குள் சிறுத்தைகள் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • வனத்துறையினர் விசாரணை
    • கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர்.

    அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வருகின்றனர் இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது.

    அங்கு வசிக்கும் விவசாயிகள் தவமணி, சிவக்குமார் ஆகியோர் வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த பெரிய ஆடுகள் மற்றும் கன்று குட்டியை 2 மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இதே தோனிகான் பட்டி பகுதியில் வசிப்பவர் முனிரத்தினம் விவசாயி இவர் வீடு நிலத்தில் இருப்பதால் பாதுகாப்பிற்காக வீட்டில் நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

    இரவு நேரங்களில் சிறுத்தைகள் இவர் வசிக்கும் வீட்டு அருகே உலா வருவதால்நாய்கள் குரைக்குமாம். நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நாய்கள் குறைத்துக் கொண்டே இருந்துள்ளது அப்போது முனிரத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு சிறுத்தைகள் உலா வருகிறது என இருந்துள்ளனர் சிறிது நேரம் கழித்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

    இதனால் அவர்கள் வெளியே வந்து கூச்சல் போட்டுள்ளனர். நாயை சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்றது தெரியவந்தது உடனடியாக சத்தம் போட்டபடி சென்றபோது நாயின் கழுத்துப் பகுதியில் சிறுத்தை கடித்து கொன்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறையினர் நாயை சிறுத்தை கொன்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுத்தைகள் நாயை இழுத்துச் சென்ற சம்பவத்தால் வனப்பகுதியை ஒட்டியபடி வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

    ×