search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தைகள் நடமாட்டம்"

    • வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.
    • வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப் பகுதியை ஒட்டியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.

    மேலும் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பரிதாப மாக இறந்தார். அடுத்தடுத்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    வனவிலங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரி அருகே நெல்லிப்பொயில் என்ற பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளது.

    அந்த பகுதியில் 3 சிறுத்தை புலிகள் உலாவியபடி இருந்திருக்கிறது. அகனம் பொயில் பகுதியில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் 3 சிறுத்தைப்புலிகள் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுத்தைப்புலிகள் எங்கு பதுங்கி இருக்கின்றன? என்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • 4 வனச்சரகங்களில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • வன ஊழியா்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்களை கொண்டு இந்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. இந்த நான்கு வனச்சரகங்களிலும் ஆண்டுதோறும் கோடை கால மற்றும் குளிா்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    இதன்படி, இந்த நான்கு வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி கணக்கெடுப்பாளா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட உதவி வனப்பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறியதாவது:-

    உடுமலை, அமராவதி உள்ளிட்ட 4 வனச்சரகங்களில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடி, செந்நாய் மற்றும் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் எனப் பிரிக்கப்பட்டு வாழ்விட சூழல் கூறுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட உள்ளது.

    வன ஊழியா்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்களை கொண்டு இந்த கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உடுமலை வனச்சரகத்தில் மானுப்பட்டி பிரிவு கொட்டையாறு சுற்றில் ஜல்லிமுத்தாம் பாறை மற்றும் உலிவையாறு ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இது வன விலங்குகள் கணக்கெடுப்புக்கு சென்றபோது தெரியவந்துள்ளது என்றாா்.


    • குன்னூர் அருகே பேரட்டி பகுதியில் ராமன் என்பவரது வீட்டு வளாகத்தில் 2 சிறுத்தைகள் வலம் வந்துள்ளன.
    • குன்னூா் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டின் கேட்டை தாண்டி சிறுத்தை கடந்த வாரம் உள்ளே நுழைந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

    குன்னூர் அருகே பேரட்டி பகுதியில் ராமன் என்பவரது வீட்டு வளாகத்தில் 2 சிறுத்தைகள் வலம் வந்துள்ளன. இந்த சிறுத்தைகள், நாய்களை வேட்டையாட வந்துள்ளன. ஆனால், நாய்கள் கூண்டுக்குள் இருந்து சப்தமிட்டதைத் தொடா்ந்து, சிறுத்தைகள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேறின. தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கட்டபெட்டு வனத்துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்தனா்.

    இதேபோல குன்னூா் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டின் கேட்டை தாண்டி சிறுத்தை கடந்த வாரம் உள்ளே நுழைந்தது. இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்தும், அவை இன்னும் பிடிபடவில்லை.

    பேரட்டி குடியிருப்பு பகுதியில் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். எனவே, எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக சிறுத்தைகளை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ×