search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட புதிய அலுவலகம்
    X

    நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட புதிய அலுவலகம்

    • திருமாவளவன் எம்.பி. இன்று மாலை திறந்து வைக்கிறார்
    • மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார்.

    நாகர்கோவில்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே சண்முகா தெருவில் இன்று (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார். புதிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திறந்து வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கம் முன்பு மணிப்பூர் மாநில மக்களுக்கு நீதி வழங்கக்கோரி நடைபெறும் சிறப்பு மாநாட் டில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. புதிய அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×