search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசு மாட்டை கொன்ற சிறுத்தைகள்
    X

    குடியாத்தம் அருகே சிறுத்தைகளால் கொல்லப்பட்ட பசு மாடு.

    பசு மாட்டை கொன்ற சிறுத்தைகள்

    • காட்டின் நடுவே வனத்துறையினர் ரோந்து
    • விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் விவசாயி இவருக்கு சொந்தமாக பசு மாடுகள் உள்ளன. இன்று காலையில் வெங்கடேசனின் பசுமாடு ஒன்று வனப்பகுதியை ஒட்டி உள்ள புத்துக்கோவில் பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தது.

    காட்டுக்குள் இருந்து வந்த 2 சிறுத்தைகள் பசு மாட்டை கடித்து இழுத்து சென்றன. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அங்கு சென்றனர். அவர்கள் கூச்சலிட்டதால் சிறுத்தைகள் தப்பி ஓடி விட்டன. இந்த சம்பவத்தில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.

    குடியாத்தம் அடுத்த சைனகுண்டா, கொட்டமிட்டா பகுதிகளில் குடியாத்தம் கல்லப்பாடி காப்புக் காடுகள் மற்றும் வீரிசெட்டிபல்லி காப்புக் காடுகள் பகுதியில் காட்டின் நடுவே வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காட்டின் நடுவே வன ஊழியர்கள் தங்கி இருக்கும் கொட்டகை அருகேயும் சிறுத்தைகள் உலவுவதாகவும், வனத்துறையினரின் கொட்டகையில் சிறுத்தைகள் படுத்து இருப்பதாகவும் மேலும் வன ஊழியர்களுக்கு சற்று சில மீட்டர் தொலைவு வரை வந்து சிறுத்தைகள் செல்வதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த மாதம் சைனகுண்டா பகுதியில் சிறுத்தைகள் 2 மேய்ச்சலுக்குச் சென்ற 2 கன்று குட்டிகளை கொன்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடுகளை சிறுத்தைகள் கடித்து குதறி கொன்றது.

    தொடர்ந்து சிறுத்தைகள் கால்நடைகளை கடித்துக் கொன்று வருவதால் விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    Next Story
    ×