search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையோர ஆக்கிரமிப்பு"

    • பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
    • நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.

    அவினாசி:

    அவினாசி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வந்தது. இதனால் நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அவினாசி வாரச்சந்தை வளாகத்திற்கு மாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகிய நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

    உடனே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அவினாசி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில ஈடுபட்டனர்.இதை அடுத்து தாசில்தார் மோகனன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று முதல் தாசில்தார் மோகனன், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளிட்டோர் அவினாசி புதிய பஸ் நிலையம் வந்தனர். அப்போது அங்கு கடை அமைக்க வந்த சாலையோர வியாபாரிகளிடம் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நடப்பதாலும், நிரந்தர கடை வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், ஏற்கனவே அறிவித்தபடி இங்கு சாலையோர வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாரச்சந்தைபேட்டைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்க மறுத்து சாலையோர வியாபாரிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிகமாக அரசு அலுவலகங்கள் முன்பாக மட்டும் கட்டில் போட்டு கடை நடத்த அனுமதிக்கப்பட்டது.

    மேலும் வண்டி கடைகள், டெண்ட் கடைகள் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.மேலும் ஒலிபெருக்கி மூலம் சாலையோர அனைத்து வியாபாரிகளும் அதற்கென ஒதுக்கப்பட்ட சந்தைபேட்டையில் வைத்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 55 பேர் பதிவு செய்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலானவாகனங்கள் செல்கின்றது.
    • ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.

    இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது .நகரின் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை. இப்போது உள்ள ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தாலே ஓரளவு போக்குவரத்து நெரிசல் தீரும்.

    ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வருவதில்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×