search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of shops"

    • பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
    • நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.

    அவினாசி:

    அவினாசி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வந்தது. இதனால் நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அவினாசி வாரச்சந்தை வளாகத்திற்கு மாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகிய நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

    உடனே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அவினாசி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில ஈடுபட்டனர்.இதை அடுத்து தாசில்தார் மோகனன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று முதல் தாசில்தார் மோகனன், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளிட்டோர் அவினாசி புதிய பஸ் நிலையம் வந்தனர். அப்போது அங்கு கடை அமைக்க வந்த சாலையோர வியாபாரிகளிடம் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நடப்பதாலும், நிரந்தர கடை வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், ஏற்கனவே அறிவித்தபடி இங்கு சாலையோர வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாரச்சந்தைபேட்டைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்க மறுத்து சாலையோர வியாபாரிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிகமாக அரசு அலுவலகங்கள் முன்பாக மட்டும் கட்டில் போட்டு கடை நடத்த அனுமதிக்கப்பட்டது.

    மேலும் வண்டி கடைகள், டெண்ட் கடைகள் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.மேலும் ஒலிபெருக்கி மூலம் சாலையோர அனைத்து வியாபாரிகளும் அதற்கென ஒதுக்கப்பட்ட சந்தைபேட்டையில் வைத்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 55 பேர் பதிவு செய்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலைக் கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமானால் கச்சிராய பாளையம் அருகே உள்ள வெள்ளிமலைக்கு தான் வர வேண்டும். மலை கிராமங்களுக்கு முக்கிய நகரமாக வெள்ளி மலை திகழ்ந்து வருகிறது. இதனால் வெள்ளி மலைக்கு சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளிமலை பஸ் நிலையத்தை சுற்றி 250 கடைகள் உள்ளது. பஸ் நிலைய விரிவாக்கத்திற்காக பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காலக்கெடுவும் விதித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கடைகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சின்னசாமி, கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தினார்கள்.200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இச் சம்பவத்தால் வெள்ளிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×