search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadside encroachment"

    • பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
    • நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.

    அவினாசி:

    அவினாசி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வந்தது. இதனால் நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அவினாசி வாரச்சந்தை வளாகத்திற்கு மாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகிய நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

    உடனே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அவினாசி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில ஈடுபட்டனர்.இதை அடுத்து தாசில்தார் மோகனன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று முதல் தாசில்தார் மோகனன், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளிட்டோர் அவினாசி புதிய பஸ் நிலையம் வந்தனர். அப்போது அங்கு கடை அமைக்க வந்த சாலையோர வியாபாரிகளிடம் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நடப்பதாலும், நிரந்தர கடை வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், ஏற்கனவே அறிவித்தபடி இங்கு சாலையோர வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாரச்சந்தைபேட்டைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்க மறுத்து சாலையோர வியாபாரிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிகமாக அரசு அலுவலகங்கள் முன்பாக மட்டும் கட்டில் போட்டு கடை நடத்த அனுமதிக்கப்பட்டது.

    மேலும் வண்டி கடைகள், டெண்ட் கடைகள் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.மேலும் ஒலிபெருக்கி மூலம் சாலையோர அனைத்து வியாபாரிகளும் அதற்கென ஒதுக்கப்பட்ட சந்தைபேட்டையில் வைத்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 55 பேர் பதிவு செய்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ஜெயங்கொண்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகன ஓட்டிகள் தாராளமாக சென்று வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு 4 ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு கடைக்காரர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தினார். 

    இந்நிலையில் ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து நேற்று முன்தினமே ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் சிலர் நேற்று காலை அகற்றினர். பெரும்பாலான கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர். இந்நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று காலை 11 மணியளவில் ஜெயங்கொண்டம் கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி ஊழியர்கள், போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகன ஓட்டிகள் தாராளமாக சென்று வருகின்றனர்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    மேலும் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையேல் மீண்டும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் தொடரும். எனவே தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்க தனிப்படை அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிவராஜ், சண்முகசுந்தரம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மின்சார வாரிய அதிகாரி சிலம்பரசன், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    ×