என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலை மறியல் போராட்டம்"
- டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
- தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிரு ப்பதாவது:-
ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகிறார்கள். கடை எண் 3679ஐ இடமாற்றம் செய்து வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதேபோல் ஏற்கனவே 2017-ம் ஆண்டு புதிய கடை அமைக்க முயற்சித்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை ெபறப்பட்டது. தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் அங்கு வரும் குடிமகன்களால் பெண்களுக்கு மிகப்பெரிய தொல்லைகள் ஏற்படும். இது தவிர அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள், வழித்தடங்கள், காலி மனைகளில் குடிமகன்களால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. டாஸ்மாக் வருவதால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.
மேலும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எனவே டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தீவிரமாகும் என அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.
- 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
- 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
அவினாசி :
திருமுருகன்பூண்டி நகராட்சி 4, 5, 8, 9 வாா்டுகளுக்கு உள்பட்ட துரைசாமி நகா், துரைசாமி நகா் விரிவாக்கம், விநாயகா காா்டன், விநாயகா காா்டன் விரிவாக்கம், தன்வா்ஷினி நகா், முல்லை நகா், மகாலட்சுமி காா்டன், எம்ஜிஆா் நகா், என்எஸ் பி நகா், ஏவிபி லட்சுமி அம்மாள் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இப்பகுதி மக்களுக்கு தொடா்ந்து 6 மாதங்களாக 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனா்.
இந்தநிலையில் 25 நாட்களுக்கு மேலாகியும் குடிநீா் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது,3 நாட்களுக்குள் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ், நகர மன்றத் தலைவா் குமாா் ஆகியோா் உறுதியளித்தனா். 3 நாட்களுக்குள் குடிநீா் பிரச்சனைக்குத் தீா்வு ஏற்படாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
- குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் காலை 6 மணிக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே ஒலகடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைமேடு பகுதிக்கு போதுமான ஆற்று குடிநீர் வரவில்லை என பவானி -வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் ஒலகடம் அருகே குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்