search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Blockade Protest"

    • டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    • தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

    ஊத்துக்குளி : 

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிரு ப்பதாவது:-

    ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகிறார்கள். கடை எண் 3679ஐ இடமாற்றம் செய்து வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதேபோல் ஏற்கனவே 2017-ம் ஆண்டு புதிய கடை அமைக்க முயற்சித்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை ெபறப்பட்டது. தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் அங்கு வரும் குடிமகன்களால் பெண்களுக்கு மிகப்பெரிய தொல்லைகள் ஏற்படும். இது தவிர அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள், வழித்தடங்கள், காலி மனைகளில் குடிமகன்களால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. டாஸ்மாக் வருவதால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

    மேலும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எனவே டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தீவிரமாகும் என அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.

    • தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பஸ் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பில் இடைக்கால தடை விதிக்கக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பஸ் நிலையம் முன்பு திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம், மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிந்தா, கற்பக கனி, மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், செந்தூர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், மார்க்கஸ், சின்ன காளை, சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கோபால், கந்தசாமி, முனியசாமி, அந்தோணி குரூஸ், கிருஷ்ணன், வெங்கடசுப்பிரமணியன், சாமுவேல் ஞானதுரை, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளர் சுடலை, அமைப்பு சாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜான்சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் தனுஷ், தாமஸ், மணி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
    • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

    அவினாசி :

    திருமுருகன்பூண்டி நகராட்சி 4, 5, 8, 9 வாா்டுகளுக்கு உள்பட்ட துரைசாமி நகா், துரைசாமி நகா் விரிவாக்கம், விநாயகா காா்டன், விநாயகா காா்டன் விரிவாக்கம், தன்வா்ஷினி நகா், முல்லை நகா், மகாலட்சுமி காா்டன், எம்ஜிஆா் நகா், என்எஸ் பி நகா், ஏவிபி லட்சுமி அம்மாள் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இப்பகுதி மக்களுக்கு தொடா்ந்து 6 மாதங்களாக 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

    இந்தநிலையில் 25 நாட்களுக்கு மேலாகியும் குடிநீா் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது,3 நாட்களுக்குள் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ், நகர மன்றத் தலைவா் குமாா் ஆகியோா் உறுதியளித்தனா். 3 நாட்களுக்குள் குடிநீா் பிரச்சனைக்குத் தீா்வு ஏற்படாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

    • ஆறுமுகநேரியில் திடீர் சாலை மறியல் போராட்டங்களால் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • திடீர் சாலை மறியல் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த 2 மாதங்களில் அரசியல் கட்சி அல்லாத பல்வேறு தரப்பினரால் நடத்தப்படும் திடீர் சாலை மறியல் போரா ட்டங்களால் திருச்செந்தூர் - தூத்து க்குடி சாலையில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே இந்த வழியில் மிகுந்த போக்கு வரத்து நெருக்கடி உள்ள சூழ்நிலையில் இப்படி யான போராட்டங்க ளால் பயணிகளும் பொது மக்களும் பெரிதும் சிரமத் துக்கு ஆளாகி வரு கின்றனர்.

    இதனிடையே நேற்று மாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் மேலும் மற்றொரு ' திடீர்' சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள தாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலகுமரேசன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சதி திட்டம் தீட்டியதாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் உள்ளிட்ட தனி ப்படையினர் ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த சாந்தன் மகன் ராஜேஷ் (28) என்பவரை மதுரையில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

    இதனை கண்டித்தும் ராஜேஷ் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்ப தாக கூறியும் அவரது மனைவி, தாய், அக்காள், அண்ணன் மற்றும் உறவினர்கள் திரண்டு ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டு 4 சாலை களிலும் வெகு தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. உடனே அங்கு ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீ சார் விரைந்து வந்தனர். அவர்களிடம் போராட்ட குழுவினர் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

    ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    இப்படியான திடீர் சாலை மறியல் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×