search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு
    X

    சாலை மறியல் போராட்டத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை.

    டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு

    • டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    • தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிரு ப்பதாவது:-

    ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகிறார்கள். கடை எண் 3679ஐ இடமாற்றம் செய்து வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதேபோல் ஏற்கனவே 2017-ம் ஆண்டு புதிய கடை அமைக்க முயற்சித்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை ெபறப்பட்டது. தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் அங்கு வரும் குடிமகன்களால் பெண்களுக்கு மிகப்பெரிய தொல்லைகள் ஏற்படும். இது தவிர அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள், வழித்தடங்கள், காலி மனைகளில் குடிமகன்களால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. டாஸ்மாக் வருவதால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

    மேலும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எனவே டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தீவிரமாகும் என அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.

    Next Story
    ×