search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டம்
    X

    மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.

    தூத்துக்குடியில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டம்

    • தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பஸ் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பில் இடைக்கால தடை விதிக்கக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பஸ் நிலையம் முன்பு திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம், மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிந்தா, கற்பக கனி, மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், செந்தூர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், மார்க்கஸ், சின்ன காளை, சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கோபால், கந்தசாமி, முனியசாமி, அந்தோணி குரூஸ், கிருஷ்ணன், வெங்கடசுப்பிரமணியன், சாமுவேல் ஞானதுரை, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளர் சுடலை, அமைப்பு சாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜான்சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் தனுஷ், தாமஸ், மணி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×