search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனிபிரதோஷம்"

    • வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
    • சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமியன்று தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 8-ந்தேதி பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டும், 6-ந்தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டும் சதுரகிரிக்கு செல்ல வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது என்பதால் இந்த முறை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ந் தேதி மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அமாவாசையான 8-ந்தேதியும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் மலையேறி வருவதை தவிர்க்க வேண்டும். பாலித்தீன் கேரிப்பை மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை செய்யப் பட்டுள்ளது.

    சுந்தர மகாலிங்கம் கோவில் பிரதோஷ, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத மஹா சனி பிரதோஷ பூஜை நடைபெற்றது. முன்னதாக நந்தி பெருமானுக்கு பசும்பால்,தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், ஆகிய விசேஷ திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்பு பஞ்சலோக ஆரத்தி காண்பிக்கப்பட்டு உற்சவராக பார்வதி சிவபெருமானை சுமந்தபடி நந்தி பெருமான் கோவிலை 3 முறை வலம் வந்தார்.

    இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், மும்முனி, மாம்பட்டு, பிருதூர், மருதாடு, சத்யாநகர்,ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மானாமதுரை பகுதியில் சனிபிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது.
    • 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள குறிச்சிகாசி விஸ்வநாதர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. காசிவிஸ்வநாதர், காசிநந்திக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திக்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல் இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி, மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர், சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திர மவுலீசுவரர் ஆகிய கோவில்களிலும் சனிபிரதோஷம் வழிபாடு-அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×