search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு ஊழியர்கள்"

    • சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிதோறும் நடைபயணத்தை மானாமதுரையில் நடத்தினர்.
    • 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

    மானாமதுரை

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிதோறும் நடைபயணத்தை மானாமதுரையில் நடத்தினர். அண்ணா சிலை தொடங்கி நகராட்சி அலுவலகம் வரைக்கும் நடைபயண பேரணி நடந்தது.

    சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் திலகவதி, துணைத் தலைவர் பேயத்தேவன், இணைச்செயலாளர் பாண்டி மீனாள், செயலாளர் பாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் சீமைச் சாமி, மாவட்ட துணை செயலாளர் பாலுசாமி, ஒன்றிய பொருளாளர் தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது மாநிலத்தலைவர் கலா பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. ஒரு சத்துணவு ஊழியர் 3 முதல் 7 பள்ளிகள் வரைக்கும் சத்துணவு மையங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வர வேண்டியுள்ளது .

    சமையலர் மற்றும் உதவியாளர்கள் இல்லாமல் பல மையங்கள் செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சத்துணவு ஊழியர்களின் ஊதியம் சிறப்பு காலமுறை ஊதியம் என பெயர் மாற்றினார்கள்.ஆனால் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காத நிலை தொடருகிறது. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியர்களுக்கு சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்கவேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.

    முதலமைச்சரிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி திருச்சியில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம். ஜூலை 15-ல் வாழ்வாதார உரிமையும் வரையறுக்கப்பட்ட ஊதியம் கேட்டு மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

    ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி சென்னையில் முதலமைச்சரை சந்தித்து நீதி கேட்பது என்று முடிவு எடுத்து மக்களிடம் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். வருகிற 10-ந் தேதி வரை பிரசார பயணம் நடைபெறுகிறது. 2500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். திருச்சியில் வருகிற 10-ந் தேதி கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரால்1955ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, 1956 ம் ஆண்டு முதல் அரசு தொடக்க பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இத்திட்டம் 1982ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் இன்று 43 ஆயிரத்து 203 சத்துணவு மையங்களும், சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் பணியாற்றி, நாள்தோறும் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு 1995 ம் ஆண்டு முதல் மத்திய காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியது. 60 சதவீதம் மத்திய அரசு நிதியும், மாநிலஅரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கி இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணிக்கின்ற மத்திய பா.ஜக. மோடி அரசு இதுவரை அளித்து வந்த 60 சதவீத நிதியை 40 சதவிதமாக குறைத்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியது.

    மத்திய அரசு நிதி குறைத்துள்ளது எனும் காரணம் காட்டி 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் நலனில் இந்த அரசு அக்கறை காட்டாத அரசாக செயல்படுகிறது என்பதையும், 8000 சத்துணவு மையங்களை மூடுவதால், 24000 சத்துணவு ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ளாத மாநில அ.தி.மு.க. அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி கோர உரிய அழுத்தத்தை காட்டாமல், மாறாக 8000 சத்துணவு மையங்களுக்கு மூடு விழா எடுக்க நினைக்கும் நிலை மாநில அ.தி.மு.க.வின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை செயல்படுத்தாமல், கூடுதலாக கடைகளை திறக்க முயலும் அ.தி.மு.க. அரசு ஏழை எளிய மாணவர்களின் பசியை போக்கும் சத்துணவு மையங்களுக்கு மூடுவிழா நடத்தும் போக்கு கண்டிக்கத்தது.

    ஒரே கல்வித் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு இருவிதமாக ஊதியம் வழங்காமல் ஒரே ஊதியம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.

    இதுபோல் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் மனதில் கொண்டு ஏழை எளிய கல்விப் பயிலும் மாணவர்களின் நிலைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறி உள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter
    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவு கட்டணமாக ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மாநில அளவில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

    ஆனால், அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் கடந்த 29-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.

    சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அதன் சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆனாலும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இதனால், நேற்றும் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தராசு தலைமை தாங்கினார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சத் துணவு ஊழியர்கள் கையில் குடை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். 
    ×