search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "staff walking"

    • சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிதோறும் நடைபயணத்தை மானாமதுரையில் நடத்தினர்.
    • 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

    மானாமதுரை

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிதோறும் நடைபயணத்தை மானாமதுரையில் நடத்தினர். அண்ணா சிலை தொடங்கி நகராட்சி அலுவலகம் வரைக்கும் நடைபயண பேரணி நடந்தது.

    சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் திலகவதி, துணைத் தலைவர் பேயத்தேவன், இணைச்செயலாளர் பாண்டி மீனாள், செயலாளர் பாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் சீமைச் சாமி, மாவட்ட துணை செயலாளர் பாலுசாமி, ஒன்றிய பொருளாளர் தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது மாநிலத்தலைவர் கலா பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. ஒரு சத்துணவு ஊழியர் 3 முதல் 7 பள்ளிகள் வரைக்கும் சத்துணவு மையங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வர வேண்டியுள்ளது .

    சமையலர் மற்றும் உதவியாளர்கள் இல்லாமல் பல மையங்கள் செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சத்துணவு ஊழியர்களின் ஊதியம் சிறப்பு காலமுறை ஊதியம் என பெயர் மாற்றினார்கள்.ஆனால் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காத நிலை தொடருகிறது. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியர்களுக்கு சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்கவேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.

    முதலமைச்சரிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி திருச்சியில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம். ஜூலை 15-ல் வாழ்வாதார உரிமையும் வரையறுக்கப்பட்ட ஊதியம் கேட்டு மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

    ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி சென்னையில் முதலமைச்சரை சந்தித்து நீதி கேட்பது என்று முடிவு எடுத்து மக்களிடம் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். வருகிற 10-ந் தேதி வரை பிரசார பயணம் நடைபெறுகிறது. 2500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். திருச்சியில் வருகிற 10-ந் தேதி கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×