என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொரோனா பாதிப்பு"
- ஒரே நாளில் 10பேருக்கு தொற்று ஏற்பட்டது.
- கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை,
கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த மருத்துவ மாணவிக்கு முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா 2 -வது அலையின்போது கோவை மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. அப்போது தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 700-க்குமேல் பதிவானது. அதன்பின் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நோய்த் தொற்றுப் பரவல் குறைந்தது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து நோய்த் தொற்று பரவல் குறைந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு வந்தது. தொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது.
இந்நிலையில், கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கொரோனா நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 441 பேர் கொரோனாவில் இருந்து குணம டைந்துள்ளனர்.
2,617 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந் துள்ளனர். தற்போது 47 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
- 6 நாட்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
- ஈரோடு மாவட்டத்தில் இரண்டு பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது தொற்று ஏற்பட்டு, குணமடைந்தனர். கடந்த ஏப்ரல் 27 ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே 4-ல் குணமடைந்தார்.
அதன்பின் தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு.இதன்பிறகு கடந்த, 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் கடந்த மே மாதம் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் இரண்டு பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)