search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,778 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,05,691 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தினசரி  பாதிப்பு, குணமடைந்தோர், உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,774 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,481 பேர் குணமடைந்துள்ள நிலையில் 621 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 82,86,058 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,21,94,71,134  டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

    தற்போது 1,05,691 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 543 நாட்களில் மிகவும் குறைவானதாகும்.

    Next Story
    ×