search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 788 பேருக்கு கொரோனா

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 7,916 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    மேற்கு வங்காள மாநில தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 788 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 759 பேர் குணமடைந்த நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை 15,99,879 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,72,711 பேர் குணமடைந்துள்ளனர். 19, 252 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×