search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கை சின்னம்"

    • தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
    • உதயசூரியன் அல்லது கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசனிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் நேற்று முன் தினம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதை தொடர்ந்து கமல்ஹாசன் நேற்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கோவை, தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் ஒரு இடத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் உதயசூரியன் அல்லது கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசனிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் கமல்ஹாசனோ மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவதையே விரும்புகிறார். அப்போதுதான் தனது தனித்துவத்தை காட்ட முடியும் என்று அவர் நம்புகிறார்.

    ஆனால் தி.மு.க. தரப்பிலோ, நாங்கள் ஒதுக்கும் இடத்தில் போட்டியிட்டால் உதயசூரியன் சின்னத்திலேயே களம் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் ஒதுக்கீட்டில் போட்டியிடுவதாக இருந்தால் கை சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்று அந்த கட்சி கூறி வருகிறது.

    இதனால் என்ன முடிவை எடுக்கலாம் என்பது பற்றி கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட உள்ளது. கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சின்னத்தி லேயே கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். அதுபோன்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்திலேயே கமல்ஹாசனை போட்டியிட வலியுறுத்தி நிர்பந்தம் செய்வது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதை விட கை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்று கமல்ஹாசனிடம் காங்கிரஸ் கட்சியினர் அறிவுறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை ஏற்று கமல்ஹாசன் கை சின்னத்தில் களம் இறங்குவரா? இல்லை மக்கள் நீதி மய்யம் கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடு வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ×