search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலோ இந்தியா விளையாட்டு போட்டி"

    • ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி.
    • கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது.

    சென்னை:

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெற இருக்கிறது.

    எனவே கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்தி கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • போட்டியின் நிறைவு விழா சென்னையில் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

    இளைஞர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியாக நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட உள்ளது.

    இந்த விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. போட்டியின் நிறைவு விழா சென்னையில் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக அவர் இன்று மாலை டெல்லி செல்கிறார்.

    நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க உள்ளார். அவருடன் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மேக்நாத் ரெட்டி ஆகியோரும் உடன் செல்கிறார்கள்.

    ×