search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளியல் தொட்டி"

    • குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்ப சென்றவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
    • இது தொடர்பாக பெருங்குடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிரா–மத்தை சேர்ந்தவர் பாலமுரு–கன் (வயது 40). இவருக்கு திருமணமாகி ஜோதிமணி என்ற மனைவியும், 2 மகன் களும், ஒரு மகளும் உள்ள–னர்.

    கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பால–முருகன் வழக்கமாக பெரிய–ஆலங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அந்த பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு குளிக்க செல்வார். அதே–போல் இன்று காலை 7 மணிக்கு சென்றவர் தொட் டியில் தண்ணீர் இல்லா–ததால் அங்கு திறந்த நிலை–யில் இருந்த மின்சார பெட் டியில் சுவிட்சை இயக்கி–னார்.

    அப்போது எதிர்பாராத வி–தமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலி–யானார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பெருங்குடி போலீசார் பால–முருகனின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோத–னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி–றார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே–போல் தண்ணீருக்காக திறந்து கிடந்த பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 பேர் காயம் அடைந்தனர். இது இரண்டாவது சம்பவம் ஆகும்.

    பெரிய ஆலங்குளம் பஞ்சாயத்து நிர்வாகத்தி–னரிடம் பலமுறை இது–தொடர்பாக புகார் அளித் தும் அவர்கள் கண்டுகொள் ளாததால் இன்று ஒருவர் உயிர்ப்பலி ஆகியிருப்பதாக பாலமுருகனின் உறவினர் கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறைந்த வயதில் மின்சாரம் பாய்ந்து பலியான பால–முருகன் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • சிவகங்கையில் குளியல் தொட்டியை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி 11-வது வார்டு மன்னர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிசுவரி, கவுன்சிலர்கள் ராஜா, ஆயுப்கான், மகேஷ், ராபர்ட், தாமு, கார்த்திகேயன், ராமதாஸ், கிருஷ்ணகுமார், ஒப்பந்ததாரர் முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், அவைத் தலைவர் பாண்டி, நகரதுணைசெயலாளர் மோகன்,சேதுபதி, சரவணன், முருகன்,சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.60 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி அமைக்கப்படுகிறது.
    • நடைபயிற்சி செல்வதற்கும் பாதை அமைக்கப்படுகிறது

    பேரூர்,

    கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான கோபுரங்கள், மண்டபங்கள், கலை நுட்பத்துடன் காண்போரை வியக்க வைக்கும் வகையில் உள்ளன.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கல்யாணி யானை தான்.

    இந்த கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார்.

    இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    யானையை பார்க்கவே கோவிலுக்கு வரும் தனி கூட்டமும் இருக்கிறது. கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது.

    இந்த நிலையில் பேரூர் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து குளியல் தொட்டி அமைக்க பேரூர் கோவில் நிர்வாகத்தினர் பல பகுதிகளில் இடம் தேர்வு செய்தனர்.

    தற்போது கோவிலுக்கு அடுத்து அங்காளம்மன் கோவில் பின் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல்அதே

    பகுதியில் யானை நடை பயிற்சி மேற்கொள்ளவும் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பேரூர் கோவில் கல்யாணி யானை கோவில் வளாகத்தில் காலை, மாலை என 2 வேளைகளில் குளித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் யானை குளிப்பதை பார்க்கின்றனர்.

    இதன் காரணமாக 1½ மணி நேரம் மட்டுமே யானையால் குளிக்க முடிகிறது. நடைபயிற்சிக்கும் போதிய இடம் இல்லை. தற்போது கோவில் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி மற்றும் நடைபயிற்சி பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அமைச்சரால் திறந்து வைக்கப்படும். இனிமேல் கல்யாணி யானை 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போடும். 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×