search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bathtub"

    • குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்ப சென்றவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
    • இது தொடர்பாக பெருங்குடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிரா–மத்தை சேர்ந்தவர் பாலமுரு–கன் (வயது 40). இவருக்கு திருமணமாகி ஜோதிமணி என்ற மனைவியும், 2 மகன் களும், ஒரு மகளும் உள்ள–னர்.

    கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பால–முருகன் வழக்கமாக பெரிய–ஆலங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அந்த பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு குளிக்க செல்வார். அதே–போல் இன்று காலை 7 மணிக்கு சென்றவர் தொட் டியில் தண்ணீர் இல்லா–ததால் அங்கு திறந்த நிலை–யில் இருந்த மின்சார பெட் டியில் சுவிட்சை இயக்கி–னார்.

    அப்போது எதிர்பாராத வி–தமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலி–யானார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பெருங்குடி போலீசார் பால–முருகனின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோத–னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி–றார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே–போல் தண்ணீருக்காக திறந்து கிடந்த பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 பேர் காயம் அடைந்தனர். இது இரண்டாவது சம்பவம் ஆகும்.

    பெரிய ஆலங்குளம் பஞ்சாயத்து நிர்வாகத்தி–னரிடம் பலமுறை இது–தொடர்பாக புகார் அளித் தும் அவர்கள் கண்டுகொள் ளாததால் இன்று ஒருவர் உயிர்ப்பலி ஆகியிருப்பதாக பாலமுருகனின் உறவினர் கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறைந்த வயதில் மின்சாரம் பாய்ந்து பலியான பால–முருகன் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • சிவகங்கையில் குளியல் தொட்டியை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி 11-வது வார்டு மன்னர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிசுவரி, கவுன்சிலர்கள் ராஜா, ஆயுப்கான், மகேஷ், ராபர்ட், தாமு, கார்த்திகேயன், ராமதாஸ், கிருஷ்ணகுமார், ஒப்பந்ததாரர் முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், அவைத் தலைவர் பாண்டி, நகரதுணைசெயலாளர் மோகன்,சேதுபதி, சரவணன், முருகன்,சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×