search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தின விழா"

    • கலெக்டர் கொடியேற்றினார்
    • 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாகலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.

    தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து 221 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே14லட்சத்து 30ஆயிரத்து 190 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    21 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். பள்ளி மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
    • 46 போலீசாருக்கு பதக்கம் வழங்கினார்

    வேலூர்:

    குடியரசு தின விழாவையொட்டி வேலூர் கோட்டை காந்தி சிலைக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நேதாஜி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.34 லட்சத்து 94,805 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் 46 போலீசாருக்கு பதக்கம் வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 271 அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • கலெக்டர் மா.பிரதீப் குமார் தேசியக்கொடியேற்றினார்
    • ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (26.01.2023) நடைபெற்ற குடியரசுதின விழாவில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தேசி–யக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மூவர் ணத்திலான பலூன்க–ளைப் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற் றுக்கொண்டார்.

    பின்னர் காவல் துறையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 98 காவலர்களுக்கு முதல–மைச்சர் பதக்கத்தினை கலெக்டர் வழங்கி பாராட்டி–னார். தொடர்ந்து வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை, பள்ளிக் கல்வித் துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, போக்குவ–ரத்துத்துறை, ஆவின், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் சிறப்பாகப் பணி–யாற்றிய 52 அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டி–னார்.

    விழாவில் வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 55 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    நாட்டின் விடுதலைக் காகப் பாடுபட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும் பத்தினரை அவர்க–ளின் வீடுகளுக்குச் சென்று மாவட்ட நிர்வா–கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌர–விக்கப் பட்டனர். விழாவில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷ–னர் சத்தியபிரியா, மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்தி–கேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஆவின் பொது மேலாளர் அபிராமி, திருச்சி வருவாய் கோட்டாட் சியர் தவச்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அலுவ–லர்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். மேலும் சமாதான வெண் புறாக்க ளையும், மூவர்ன நிறத்திலான பலூன்களையும் பறக்க விட்டார்,

    மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து காவல்து றையினர் ஆயுதப்படை ஆய்வாளர் இளையராஜா தலைமையிலும், முதல் படைக்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் முத்துசாமி, இரண்டாம் படைக்கு உதவி ஆய்வாளர் கீர்த்தனா, தீயணைப்புத்துறை யினர் நிலைய தலைமை அலுவலர் ராமச்சந்திரன், வனத்துறையினர் வனவன் முருகன், ஊர் காவல் படையினர் ஜான ரத்தினம், தேசிய மாணவர் படையினர் ரஞ்சித், ஜூனியர் பிரிவு கவிராஜ் ஆகியோர் தலைமையிலும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

    மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 34 பேர், தீயணைப்பு மீட்புபணிகள் துறை 12- பேர், வருவாய்த்துறை 8 பேர், ஊரக வளர்ச்சி துறை 9 பேர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை 8 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 191 பேருக்கு நற்சான்றுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணி ஆற்றிய காவல்து றையினர் 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாசற்ற பணி நிறைவு செய்த ஈப்பு ஓட்டுநர்கள் 7 பேருக்கு 4 கிராம் தங்க பதக்கத்தை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,வேளாண் இணை இயக்குநர் வேல்விழி, மருத்தவக்கல்லூரி மருத்து வமனை கண்காணிப்பாளர் நேரு, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனா ளிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
    • போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    கடலூர்:

    குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் காரில் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செ ல்வன் தலைமையில் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல்படை, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட, சாரண-சாரணிய, செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் அணிவகுத்து வந்தனர். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 90 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். பின்னர் தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, மருத்துவம், வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 183 பேருக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 35 பயனாளிகளுக்கு 2 கோடி 86 லட்சம் 35 ஆயிரம் 185 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

    விழாவில் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • விருதுநகரில் குடியரசு தின விழாவில் 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
    • அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு காலை 8.15 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. பாண்டி உள்பட 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 247 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முருகேசன், வெங்கடேஸ்வரன், ராஜேஷ், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், நகரசபை கமிஷனர் ஸ்டான்லி பாபு, மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் நற்சான்றிதழ் பெற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத் தூணில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, நகரசபை கமிஷனர் ஸ்டான்லிபாபு, கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    • சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
    • கலெக்டர் தேசிய கொடியேற்றினார்

    கரூர்,

    குடியரசு தினவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர். த.பிரபுசங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி–வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் சமாதானப்புறாக் களையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்க–ளையும் பறக்க விட்டார். மாவட்ட காவல் கண்கா–ணிப்பாளர் சுந்தர–வதனம் முன்னிலை வகித்தார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் த.பிரபுசங்கர், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறைகளை சார்ந்த நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். விழாவில் 55 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில், இன்று குடியரசு தினவிழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 56 காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்.

    விழாவில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 057 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்த்து றையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், தொழில் வணிகத்துறையின் (மாவட்ட தொழில் மையம்) சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 91 ஆயிரத்து 576 மதிப்பீட்டிலும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 78 ஆயிரத்து 133 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும், 59 காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கும், பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 388 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர், பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • இதில் மாவட்ட கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு, குடியரசின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையை சேர்ந்த 61 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், 63 பேருக்கு சான்றிதழ்கள், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய தன்னார்வலர்கள் உட்பட மொத்தம் 190 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார்.

    வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வாழ்ந்து காட்டு வோம் திட்டம், மீன்வளத்துறை, தாட்கோ, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை துறை களின் சார்பில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலை யில்லா தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 48 பயனாளி களுக்கு ரூ. 96 லட்சத்து88 ஆயிரத்து 986 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    விழாவில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகன் சுதாகர் உள்பட போலீஸ் அதிகாரிகள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம் பெற்றது.
    • சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றிருந்தன.

    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

    ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம் பெற்றது. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்றனர். முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டது சிறப்பாகும்.

    இந்நிலையில், விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் தொடங்கியது.

    இதில், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில், சமூக வளர்ச்சி, மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில், ஒளவையார், வேலுநாச்சியார் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த ஊர்தியில், பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பால சரஸ்வதி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார் உருவங்கங்கள் இடம்பெற்றன.

    சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றிருந்தன.

    • 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
    • நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. விழா நடைபெறும் இடத்திற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி வருகை தந்தனர்.

    எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதற்கு முன்பாக, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றிய பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை நடைபெற்று வருகிறது.

    ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம் பெற்றது. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்றனர். முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டது சிறப்பாகும்.

    விமான படையில் 4 அதிகாரிகளுடன் 148 வீரர்கள் அணிவகுத்தனர். 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். அணி வகுப்பில் எகிப்து நாட்டு படை பிரிவும் பங்கேற்றது.

    மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார அணிவகுப்பு, குழந்தைகளின் கலாசார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றன.

    அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்று வருகின்றன. 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன. நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட சில இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

    • பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை சென்றது.

    நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில் (முன்பு ராஜ பாதை) குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டு தலைவரை வரவழைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். எகிப்து அதிபர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றிய பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை செல்கிறது.

    ×