என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
- கலெக்டர் கொடியேற்றினார்
- 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாகலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து 221 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே14லட்சத்து 30ஆயிரத்து 190 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
21 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். பள்ளி மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்