search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழே விழுந்த"

    • கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் ஆலு குழி காசியூர் நரியன் தோட் டத்தைச் சேர்ந்தவர் கருப்ப ணகவுண்டர் (வயது 76). இவருக்கு சுப்பாயாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் விவசாய வேலை செய்து வருகிறார்.மேலும் சொந்தமாக 2 மாடு களை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று கருப்பணகவுண்டர் மாடுகளை மேய்த்து விட்டு பின்னர் மாட்டு தொழு வத்திற்கு வரும்போது மாட்டின் கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை கோ பியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகி ச்சைக்காக அைழத்து சென்றனர். பின்னர் அங்கு முத லுதவி பெற்று மேல்சிகி ச்சைக்காக ஈரோடு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கரு ப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவ ரது மகன் மாரிமுத்து (43) கடத்தூர் காவல் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
    • இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொடிவேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமேரி (வயது 71). இவரது மகன் சேவியர் (49). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சேவியர் வழக்கம் போல் நல்ல கவு ண்டன் பாளையம் மலர் நக ரில் புதிதாக கட்டி வரும் ஒரு கட்டிடத்திற்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று ள்ளார்.

    அங்கு சேவியர் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மேல்தளத்திற்கு செல்வதற்காக படியில் ஏறினார். அப்போது எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிரு ந்தவர்கள் சேவியரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சேவியர் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். இதைய டுத்து சேவியரின் தாய் செ ல்வமேரி இது குறித்து கோபி போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியில் இருந்து ஒரு ராட்சத கிராணைட் கல் சாலையில் கீழே விழுந்தது.
    • எந்த ஒரு வாகனமும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை.

    அந்தியூர், 

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. மேலும் இந்த வழியாக செல்வதனால் போக்குவரத்து தொலைவு குறைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்த டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து ராட்சத கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி மலைப்பாதையின் 2-வது வளைவில் திரும்பும் பொழுது லாரியில் இருந்து ஒரு ராட்சத கிராணைட் கல் சாலையில் கீழே விழுந்தது.

    இதனையடுத்து டிரைவர் அந்த லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு அங்கேயே நின்றிருந்தார். அதிகாலை நேரம் என்பதா லும், லாரியின் பின்னால் எந்த ஒரு வாகனமும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை.

    மேலும் சாலை ஓரமாக இந்த கிரானைட் கல் விழுந்திருப்பதால் போக்கு வரத்து பாதிப்பு எதுவும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றது. தகவலை அறிந்த பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தனபால், முருகன் உள்ளி ட்ட போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லை வண்டியில் ஏற்றும் பணி யில் ஈடுபட்டனர்.

    மேலும் பொக்லைன் எந்திரத்தின் மூலமாக மட்டுமே இந்த கல்லை ஏற்ற முடியும் என்பதால் 2 வாகனங்களை வரவழைத்து ஏற்றும் பணி நடைபெற்றது.

    பரமத்திவேலூர் அருகே மோட்டார்சைக்கிள்களில் இருந்து தவறி கீழே விழுந்த வாட்ச்மேன் பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி பாவடி தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 48). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கரூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பரமத்தி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வேலூரில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை சின்னப்பன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×