search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரீமியா பாலம்"

    • ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.
    • ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    ஆனாலும் போரில் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ அமைப்பு தங்களது படைகளை அனுப்பினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியா எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் ரஷியாவின் கிரீமியா பாலத்தை ஏவுகணை மூலம் தாக்க ஜெர்மனி திட்டமிட்டதாக ரஷியா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் கிரீமியா பாலத்தில் தாக்குதல் நடத்துவது குறித்து சாத்தியக் கூறுகள் ஜெர்மனி ராணுவ ஜெனரல்கள் விவாதித்த பதிவு இருப்பதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

    நீண்ட தூர டாரஸ் ஏவுகணைகளை பயன்படுத்து வது உள்பட கிரிமீயா பாலத்தின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பரிசீலித்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.

    உக்ரைனில் நேட்டோ ராணுவ நடவடிக்கைகள் குறித்து ரஷியா உறுதியாக நம்புகிறது என்றார்.

    உக்ரைன் போரில் மற்ற நாடுகள், நேட்டோ அமைப்பு தலையிட கூடாது என்று ரஷியா எச்சரித்து வரும் நிலையில் ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது மிகவும் தீவிரமான விஷயம். இதனால் மிகவும் கவனமாகவும், தீவிரமாகவும் விரைவாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே ஆடியோ விவகாரம் தொடர்பாக முழு விசாரணைக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆடியோவில் மாற்றங்கள் செய்யப்பட்டதா? என்பது எங்களால் உறுதியாக கூற முடியவில்லை" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
    • உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    கிவ்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.

    சமீபத்தில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் பாலம் மற்றும் ஆயுத கிடங்கு மீது ஆளில்லா விமானம் (டிரோன்) தாக்குதல் நடத்தப்பட்டன.

    அதே போல் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.

    இதற்கிடையே ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிரீமியா மற்றும் மாஸ்கோ நகரம் மீது நடந்த உக்ரைனின் டிரோன் தாக்குதலை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும். உக்ரைனின் செயல்கள் பதற்றங்களை அதிகரிக்க செய்யும். இந்த சூழ்நிலையை மேற்கத்திய நாடுகள் தூண்டி விடுகின்றன. இதனால் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை எங்களது தரப்புக்கு உள்ளது என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிவ்வின் புறநகர் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு இருந்தது.

    இதனால் மக்கள் பீதியடைந்தனர். ரஷியாவின் வான்வழி தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று உக்ரைன் தெரிவித்தது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    கிரீமியா மற்றும் மாஸ்கோவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா இன்று தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.

    ×