search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன் கைது"

    • வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான்

    புதுடெல்லி:

    டெல்லியில் காதலனுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் 18ம் தேதி ஷ்ரத்தாவுக்கும், காதலன் அப்தாப் அமீன் பூனாவாலாவுக்கும் இடைகிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஷ்ரத்தா, காதலன் அப்தாவால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க, உடலை 35 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச்சென்று காட்டில் வீசி உள்ளான் அப்தாப்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அப்தாப் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இது ஒருபுறமிருக்க ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்படுகின்றன. அப்பகுதியில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்துவருகின்றனர். ஷ்ரத்தாவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் அப்தாப் தனது வீட்டுக்கு வெளியே அதிகாலையில் நடந்து செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில், அவன் தனது முதுகில் பேக் மாட்டி உள்ளார். கையில் அட்டைப் பெட்டி வைத்திருந்தான். இதனால் அவன் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அக்டோபர் 18ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த சிசிடிவி காட்சி, இந்த கொடூரமான கொலை வழக்கில் வெளிவந்த முதல் சிசிடிவி வீடியோ பதிவாகும்.

    இருட்டில் மங்கலாக பதிவான அந்த வீடியோவில், ஒரு நபர் முதுகுப்பை மாட்டிக்கொண்டு கையில் அட்டைப்பெட்டியுடன் தெருவில் நடந்து செல்வது தெரிகிறது. அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அது அப்தாப் என்று போலீசார் கூறுகின்றனர்.

    இன்று அதிகாலை, அப்தாப் அமீன் பூனாவாலாவின் குடியிருப்பில் இருந்து கனமான மற்றும் கூர்மையான வெட்டும் கருவிகளை போலீசார் மீட்டனர். அவை ஷ்ரத்தாவின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான். அவன் கொடுத்த தகவலின்பேரில் சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து முக்கிய ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். அப்தாபின் குருகிராம் பணியிடத்தில் இருந்து நேற்று கருப்பு பாலிதீன் பையையும் போலீசார் மீட்டனர்.

    • ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை அப்தாப் தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.
    • எரிக்கப்பட்ட தலை எங்காவது கிடக்கிறதா? என்று தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    மும்பை பால்கர் பகுதியைச் சேர்ந்த ஷ்ரத்தாவும், அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலாவும் டெல்லி மஹாரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 'லிவிங் டு கெதர்' முறையில் வாழ்ந்து வந்தனர். ஷ்ரத்தா பன்னாட்டு நிறுவன கால் சென்டரிலும், அப்தாப் நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராகவும் வேலை செய்தனர்.

    அப்தாப்புக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷ்ரத்தாவுக்கு தெரியவந்ததால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதற்கு அப்தாப் மறுத்ததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

    இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி காதலி ஷ்ரத்தாவை அப்தால் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். கொலையை மறைக்க அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டினான். அவற்றை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று வீசினான். இது தொடர்பாக அப்தாப்பை போலீசார் கைது செய்தனர். மேலும் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை தேடி வந்தனர். அதில் 10 துண்டுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

    மேலும் பல இடங்களில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை நாய் உள்ளிட்ட விலங்குகள் சாப்பிட்டு விட்டன. அந்த இடங்களில் எலும்புகள் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஷ்ராத்தாவின் தலை மற்றும் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் தலையை பிரிட்ஜில் வைத்து அப்தாப் அதை தினமும் எடுத்துப் பார்த்ததாகவும் பின்னர் அதை எடுத்து வனப்பகுதியில் வீசி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் தற்போது வேறு மாதிரியான தகவல்களும் வெளியாகி வருகின்றன.

    ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை அப்தாப் தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே எரிக்கப்பட்ட தலை எங்காவது கிடக்கிறதா? என்று தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    உடல் பாகங்களின் நாற்றம் காரணமாக அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவற்றை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து பல பகுதியிலும் வீசியதாக கூறப்படுகிறது.

    கொலை செய்யப்பட்டவரின் உடலை மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் எப்படி அப்புறப்படுத்துவது என்ற தகவலை அப்தாப் இணையதளத்தில் தேடியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்ட அப்தாப்புக்கு 10 மணி நேரம் ஆகியுள்ளது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அப்தாப் இடைவெளி விட்டு பீர் குடித்துள்ளார். சிகரெட் புகைத்துள்ளார் மேலும் உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

    உடலை வெட்டி முத்த பிறகு மீண்டும் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டே ஓடிடியில் சினிமா பார்த்துள்ளார். மேலும் ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு அவரது செல்போனையும் தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார். அப்போது அந்த செல்போனில் உள்ள டேட்டாவையும் அப்தாப் அழித்துள்ளார்.

    இதற்கிடையே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட குடியிருப்பில் தடயவியல் துறையினர் நேற்று தடயங்களை சேகரித்தனர். அப்போது பல முக்கிய தடயங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    கொலை நடந்த குடியிருப்பில் தடயவியல் துறையினர் சிறப்பு ரசாயனங்களை பயன்படுத்தி ரத்தக்கறைகளை கண்டுபிடித்துள்ளனர். அப்தாப் ரசாயன முறையில் சுத்தம் செய்ய முடியாத இடத்தில் மட்டுமே இந்த ரத்த தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவர் அஹப்போ குளோரிக் அமிலத்தால் தடயங்களை சுத்தம் செய்ததும் தெரிய வந்தது.

    ஷ்ரத்தாவின் உடலை குழாயின் அடியில் வைத்தே அப்தாப் வெட்டியுள்ளான். அப்போது ரத்தத்தை கழுவியதால் தண்ணீர் ஓடிக் கொண்டே இருந்துள்ளது. ரத்தக்கறைகளை அகற்ற அவன் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளான். அதே நேரத்தில் ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொன்ற அறையில் எந்தவித தடயம் மற்றும் ஆதாரமும் சிக்கவில்லை.

    இதற்கிடையே அப்தாப்பை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு போலீசாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    டெல்லிக்கு வருவதற்கு முன்பு அப்தாப்பும், ஷ்ரத்தாவும் உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 5 நாள் காவலில் போலீசார் அப்தாப்பிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் சத்தார்பூர் வன பகுதியில் வீசப்பட்டுள்ளன.
    • உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 10 துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்து காதலன் 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (வயது26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.

    இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலனுக்காக பெற்றோரை உதறி தள்ளிய ஷ்ரத்தா மும்பையின் வாசி பகுதியில் காதலனுடன் தனி வீட்டில் வாழ்ந்தார்.

    மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ஷ்ரத்தா பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றினார். அப்தாப் நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்தார்.

    மஹாரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்தனர். திருமணம் செய்யாமல் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்தனர்.

    அப்தாபுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷ்ரத்தாவுக்கு தெரியவந்தது. இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தினார். இதனால் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டது.

    நாள்தோறும் அவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இரவில் ஷ்ரத்தாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த மே மாதம் 18-ந்தேதி அவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை நடந்துள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவன் காதலி ஷ்ரத்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்தான். கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டினான்.

    இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளால் ஷ்ரத்தாவின் கைகளை 3 துண்டுகளாகவும், கால்களை 3 துண்டுகளாகவும் வெட்டினான். ஒட்டுமொத்தமாக அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டினான். அவற்றை தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்துள்ளான்.

    நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டையும் வீசி எறிந்துள்ளான். தொடர்ச்சியாக 20 நாட்கள் நள்ளிரவு 2 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனைத்து உடல் பாகங்களையும் வீசியுள்ளான். அவற்றின் சில துண்டுகளை நாய்கள் கவ்வி சென்றன.

    ஷ்ரத்தாவின் நண்பர் மூலம் தான் அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் அப்தாப்பை பிடித்து விசாரணை நடத்திய போது காதலியை கொன்று உடலை துண்டு துண்டாக வீசியது தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சைக்கோ காதலன் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    துண்டிக்கப்பட்ட காதலியின் தலையை கடைசியாக வீசியுள்ளான். அவரது நினைவாக 20 நாட்கள் தினமும் தலையை பிரிட்ஜில் இருந்து எடுத்து பார்த்துள்ளான். முடிவில் வேறு வழியில்லாமல் தலையை வீசியதாக அப்தாப் போலீசில் தெரிவித்து உள்ளான்.

    காதலி ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டும் போது அப்தாபுக்கு கையில் கத்தி குத்து காயம் ஏற்பட்டது. இதற்காக அவன் டாக்டர் அணில் குமாரிடம் சென்று சிகிச்சை பெற்றான். பழங்களை வெட்டும் போது காயம் ஏற்பட்டதாக அவன் டாக்டரிடம் பொய் கூறியுள்ளான்.

    இதை நம்பி டாக்டரும் அவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார். 5 முதல் 6 தையல்கள் வரை அப்தாபுக்கு போடப்பட்டுள்ளது.

    தற்போது டாக்டர் அணில்குமார் இந்த வழக்கில் சாட்சியாக மாறி உள்ளார். அவர் அப்ரூவர் ஆவதால் இந்த வழக்கில் பிடி இறுகுகிறது.

    துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் சத்தார்பூர் வன பகுதியில் வீசப்பட்டுள்ளன. அவற்றை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 10 துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர்கள் அதை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஷ்ரத்தாவின் தலையை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தலையை கண்டு பிடித்தால் தான் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும். தலை கண்டு பிடிக்கப்பட்டதும் மண்டை ஓடு, சூப்பர் இம்போசிசன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் காண போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுவரை மீட்கப்பட்ட எலும்புகள் டி.என்.ஏ. மாதிரிக்கு அனுப்பப்பட்டு ஷ்ரத்தாவின் தந்தை விகாசின் டி.என்.ஏ.வுடன் ஒத்து போகிறதா என்பது கண்டறியப்படும்.

    கொலையாளி உடல் உறுப்புகளை நறுக்கி சேமித்து அகற்றும் போது ஆர்த்தோ போரிக் அமிலம் (போரிக் பவுடர்) மற்றும் வேறு சில ரசாயனங்களையும் பயன்படுத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஷ்ரத்தாவின் பள்ளி நண்பர் லட்சுமணன். குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாததால் அவர் தனது நண்பருடன் வாழ்வின் துயரங்களை பகிர்ந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஷ்ரத்தாவை லட்சுமணனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் அவர் தான் ஷ்ரத்தாவின் சகோதரருக்கு தகவல் கொடுத்தார்.

    இதற்கு பிறகே அவர் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்தது. தற்போது போலீசார் ஷ்ரத்தா விவகாரம் தொடர்பாக லட்சுமணனிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையே அப்தாப் போதை பழக்கத்துக்கு அடிமையானவரா என்பதை கண்டறிய அவருக்கு போதை மருந்து சோதனையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து இருக்கும் போது அப்தாப் பல பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. அந்த பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் பூனாவாலா 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது.
    • தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது 26). மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் இவர் வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்தாப் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர்.

    அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறியது. அங்கு மெக்ருலி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். இதற்கிடையே மும்பையில் உள்ள பெற்றோருடனும் ஷ்ரத்தா தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ந் தேதிக்கு பிறகு ஷ்ரத்தாவை அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அப்தாப் அமீன் பூனாவாலா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அப்தாப் அமீன் பூனாவாலா தனது காதலி ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.

    அந்த உடல் பாகங்களை அவர் புதிதாக பிரிட்ஜ் வாங்கி பதப்படுத்தி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஷ்ரத்தா உடல் பாகங்களை அவர் 18 நாட்கள் அந்த பிரிட்ஜில் வைத்திருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துண்டுகளாக வெளியில் வீசியுள்ளார். அமெரிக்க கிரைம் படமான டெக்ஸ்டர் படத்தை பார்த்து அப்தாப் அமீன் பூனாவாலா இந்த கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் பூனாவாலா 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது. தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.

    இதனால் கூகுளில் அவன் இதற்கு விடை தேடினான். தரையில் படிந்த ரத்தக் கறைகளை சுவடு தெரியாமல் எப்படி சுத்தம் செய்வது என்று அவன் கூகுளில் ஆய்வு செய்துள்ளான். அப்போது சில ரசாயன பொருட்களை பயன்படுத்தினால் ரத்த கறைகளை முழுமையாக நீக்கலாம் என்று அவனுக்கு தெரியவந்துள்ளது.

    அதன்படி அவன் அந்த ரசாயான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டை சுத்தம் செய்திருக்கிறான். ரத்தக் கறைகள் படிந்த சட்டையையும் அவன் கூகுளில் ஆராய்ச்சி செய்துதான் சுத்தம் செய்திருக்கிறான்.

    அப்தாப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட பகுதிகளில் டெல்லி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அந்த இடங்களில் இருந்து சில எலும்பு துண்டுகள்தான் கிடைத்தன.

    கடந்த மே மாதமே ஷ்ரத்தா உடல் பாகங்கள் வெட்டி வீசப்பட்டு விட்டதால் அவை மண்ணோடு மண்ணாக போயிருக்கும் என்று போலீசார் கருதுகிறார்ள். எனவே ஷ்ரத்தா உடல் பாகங்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

    அதுபோல ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டுவதற்கு அப்தாப் பயன்படுத்திய சமையல் அறை கத்தியும் கிடைக்கவில்லை. என்றாலும், இந்த வழக்கில் துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெல்லி போலீசார் அப்தாப்பை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    முதல்கட்ட விசாரணையில் ஷ்ரத்தாவின் சமூக வலைதள தொடர்புகள் அனைத்தையும் அப்தாப் கடந்த சில மாதங்கள் வரை இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.

    • பஷீர் ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்ய கொடுக்க மறுத்து விட்டனர். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுடன் ராஜேஷ் அடிக்கடி பேசி வந்தார்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடி, கணேசபுரம், சுந்தரம் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர் புளியந்தோப்பில் உள்ள ஆடு தொட்டியில் ஆடு மற்றும் மாடுகளை பராமரிக்கும் வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் ஆடு தொட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மினிவேன் ஒன்றில் படுத்து தூங்கினார்.

    அப்போது ராஜேஷ் மீது மர்மநபர் தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் உடல் கருகிய அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தபோது வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பஷீர் (21) என்பவர் மினிவேனின் டீசல் டேங்கில் இருந்த டீசலை துணியில் நனைத்து அதனை தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் மீது போர்த்தி தீ வைத்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து பஷீரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே காதலித்த பொண்ணுடன் ராஜேஷ் நெருங்கி பழகியதால் அவரை எரித்து கொல்ல முயன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

    பஷீர் ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்ய கொடுக்க மறுத்து விட்டனர். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுடன் ராஜேஷ் அடிக்கடி பேசி வந்தார்.

    இதனை கண்டு ஆத்திரம் அடைந்த பஷீர் இரவில் ராஜேஷ் தனியாக தூங்குவதை நோட்டமிட்டு தீ வைத்து எரித்து உள்ளார்.

    மேலும் தீக்காயம் அடைந்த ராஜேசை ஆஸ்பத்திரியில் இருந்தும் பஷீர் கவனித்து வந்து இருக்கிறார். கண்காணிப்பு கேமிரா பதிவால் அவர் சிக்கி கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஷிரத்தா நாளுக்கு நாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்த தொடங்கினார்.
    • ஆத்திரம் அடைந்த அப்தாப் அமின், ஷிரத்தாவை அடித்து துன்புறுத்தினார். கடந்த மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள ஒரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வந்தவர் ஷிரத்தா.

    இவருடன் அதே நிறுவனத்தில் அப்தாப் அமின் என்பவரும் பணிபுரிந்து வந்தார். இருவரும் ஒரே பிரிவில் பணிபுரிந்து வந்ததால் நண்பர்களாக பழகினார்கள்.

    ஒரு கட்டத்தில் அவர்கள் காதலர்களாக மாறினார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் ஷிரத்தாவின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    என்றாலும் மும்பையில் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதற்கு ஷிரத்தா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். இதையடுத்து அப்தாப் அமினும், ஷிரத்தாவும் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

    டெல்லியில் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இருவரும் மெக்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ளாமல் அவர்கள் வசித்து வந்ததால் இரு குடும்பத்திலும் தொடர்ந்து எதிர்ப்பு காணப்பட்டது.

    இந்த நிலையில் அப்தாப் அமினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஷிரத்தா வலியுறுத்தினார். ஆனால் அதை அப்தாப் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படத் தொடங்கியது.

    ஷிரத்தா நாளுக்கு நாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்த தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்தாப் அமின், ஷிரத்தாவை அடித்து துன்புறுத்தினார். கடந்த மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது.

    அப்போது அப்தாப் ஆத்திரத்தில் ஷிரத்தா கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை. சமையல் செய்ய பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து ஷிரத்தா உடலை துண்டுதுண்டாக வெட்டினார்.

    மனதில் ஈவுஇரக்கமின்றி ஷிரத்தா உடலை 35 துண்டுகளாக அவர் வெட்டி பிரித்தார். அந்த உடல் பாகங்களை ஒரே சமயத்தில் வெளியே எடுத்துச்சென்றால் சிக்கிக் கொள்வோம் என்ற பயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் புதிதாக பிரிட்ஜ் ஒன்றை வாங்கி வந்தார். ஷிரத்தாவின் 35 உடல் பாகங்களையும் தனித்தனி பார்சல்களாக கட்டி அந்த பிரிட் ஜுக்குள் வைத்தார். கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெளியே வீசத்தொடங்கினார்.

    தினமும் நள்ளிரவு 2 மணிக்கு ஷிரத்தா உடல் பாகத்தில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு பகுதியில் வீசிவிட்டு வருவார். இப்படி 18 நாட்கள் ஷிரத்தா உடல் பாகங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று டெல்லி முழுக்க வீசியுள்ளார்.

    இதற்கிடையே ஷிரத்தாவுடன் அவரது குடும்பத்தினர் போனில் பேச முடியாததால் தவிப்புக்குள்ளானார்கள். அவரது தந்தை விகாஷ் மதன் கடந்த வாரம் டெல்லியில் ஷிரத்தா குடியிருந்த வீட்டுக்கு சென்றார்.

    வீடு பூட்டி இருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்தாப் அமினை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவன் ஷிரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசி விட்டது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் அவனை கைது செய்தனர். ஷிரத்தா உடல் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    • வாலாஜா தடுப்பணை அருகே அவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரேஷ்மா லதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா லதா (வயது 27). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஆற்காடு அருகே உள்ள மேல்விசாரத்தை சேர்ந்த குமரன் (29) என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதலுக்கு ரேஷ்மா லதாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் சென்னையிலேயே அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். சென்னையில் அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கோபிநாத் என்பவருக்கும் ரேஷ்மா லதாவுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்கள் சென்னையிலேயே குடியேறினர். 5 மாத கைக்குழந்தை உள்ளது.

    அதே போல குமரனுக்கும் திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

    திருமணத்திற்கு பிறகும் ரேஷ்மாலதா, குமரன் கள்ளத்தனமாக சந்திக்க தொடங்கினர். இருவரும் அடிக்கடி போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.

    இது ரேஷ்மாலதாவின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரேஷ்மா லதா ராமாபுரம் கிராமத்திற்கு வந்து தங்கி இருந்தார். ஆத்திரமடைந்த அவரது கணவர் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார்.

    ரேஷ்மா லதா கணவரை பிரிந்த நிலையிலும் குமரனுடன் போனில் பேசி வந்தார்.

    கடந்த 22-ந் தேதி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு ரேஷ்மா லதா வெளியே சென்றார். அவரை சந்திப்பதற்காக குமரன் பைக்கில் வந்தார். இருவரும் வாலாஜா தடுப்பணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் சந்தித்தனர். முதலில் இருவரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து கணவருடன் பிரச்சினை உள்ளதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமரனை ரேஷ்மா லதா வற்புறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ரேஷ்மாவை தாக்கி அவரது துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    மேலும் எந்தவித ஆதாரங்களும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக ரேஷ்மா லதா வைத்திருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.

    ரேஷ்மா லதாவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    வாலாஜா தடுப்பணை அருகே அவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.

    வாலாஜா அணைக்கட்டு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரேஷ்மா லதா குமரனுடன் பைக்கில் வந்தது பதிவாகி இருந்தது. இதனை வைத்து குமரனை போலீசார் தேடி வந்தனர்.

    செல்போன் சிக்னல் மூலம் அவர் பெங்களூருவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பெங்களூரு சென்று குமரனை கைது செய்தனர்.

    திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரேஷ்மா லதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிருந்தாவின் தாய் வளர்மதி சித்தோடு போலீசில் புகார் செய்தார்.
    • கொலை செய்யப்பட்ட பிருந்தா முதலில் கார்த்தியை காதலித்து வந்தார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் ராயப்பாளையம் ரோடு நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு மங்கையர்கரசி, பிருந்தா(23) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் மங்கையர்கரசி திருமணமாகி மொடக்குறிச்சியில் வசித்து வருகிறார். 2-வது மகள் பிருந்தா வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

    பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த தீபாவளி அன்று பிருந்தாவின் பெற்றோர் மொடக்குறிச்சியில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு சென்று விட்டனர். அவரது கணவர் கார்த்தி வேலை விசயமாக திண்டுக்கல் சென்று விட்டார்.

    பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பிருந்தாவின் தாய் தினமும் தனது மகளிடம் செல்போனில் பேசி வந்தார். கடைசியாக கடந்த 27-ந் தேதி இரவு 10 மணி அளவில் வளர்மதி தனது மகள் பிருந்தாவிடம் உடல் நலம் குறித்து போனில் விசாரித்தார்.

    மறுநாள் 28-ந் தேதி காலை வெகுநேரம் ஆகியும் பிருந்தாவின் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது பிருந்தா இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பிருந்தாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து பிருந்தாவின் உடலைப்பார்த்து கதறி அழுதனர்.

    மேலும் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிருந்தாவின் தாய் வளர்மதி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் பிருந்தாவின் சாவுக்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ள பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருந்தனர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் பிருந்தா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர். சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, சப்-இன்ஸ்பெக்டர் பாபு செந்தில் குமார் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது,

    கொலை செய்யப்பட்ட பிருந்தா முதலில் கார்த்தியை காதலித்து வந்தார். இந்த நேரத்தில் பிருந்தாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் அரவிந்த் (21) என்பவர் அடிக்கடி வந்து உள்ளார். இதனால் அரவிந்துடனும் பிருந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது.

    ஒரே நேரத்தில் பிருந்தா கார்த்தி, அரவிந்த் ஆகியோரை காதலித்து வந்து உள்ளார். இதில் கார்த்தி முந்திக்கொண்டு பிருந்தாவை திருமணம் செய்து கொண்டார். இது பற்றி தெரிய வந்ததும் அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் தான் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிருந்தா வீட்டிற்கு அரவிந்த் வந்து உள்ளார். அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அரவிந்த் பிருந்தாவை நாம் திருமணம் செய்து கொள்ளலாம் வா என்று அழைத்து உள்ளார். அதற்கு பிருந்தா நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனவே உன்னுடன் வர முடியாது என்று மறுத்து உள்ளார்.

    இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அரவிந்த் என்னுடன் வரவில்லை என்றால் நாம் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதற்கு பிருந்தா என்னால் தற்கொலை செய்து கொள்ள முடியாது நீ வேண்டுமானால் என்னை கொலை செய்து விட்டு நீ தற்கொலை செய்து கொள் என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து அரவிந்த் பிருந்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சென்னைக்கு தப்பி ஓடிவிட்டார். ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து உள்ள அரவிந்த் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று அரவிந்தை கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபு ரோந்து சென்றுள்ளார்.
    • இலுப்பக்குடி-காரைக்குடி இடையே உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்திருந்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மாத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சினேகா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார்.

    இந்த நிலையில் சினேகாவும், இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன் (28) என்பவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி காதலித்து வந்தனர். இதை தொடர்ந்து கண்ணன், சினேகா வீட்டிற்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சினேகா-கண்ணன் இடையே இருந்த காதல் முறிந்தது.

    அதன் பின்னர் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தரும்படி கேட்டுள்ளார். அதை சினேகா கொடுக்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் இரும்பு கம்பியால் சினேகாவை அடித்து கொலை செய்து விட்டார். இது பற்றி சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபு ரோந்து சென்றுள்ளார். அப்போது இலுப்பக்குடி-காரைக்குடி இடையே உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்திருந்தார்.

    தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்த அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். அவரிடம் போலீஸ்காரர் சசிகுமார் பாபு பேசியபோது, கல்லூரி மாணவி சினேகாவை கொலை செய்த கண்ணன் அவர்தான் என்பது தெரியவந்தது.

    அப்போது கண்ணன் தற்கொலை செய்வதற்காக எலி பேஸ்ட் வைத்திருந்தார். அதனை போலீஸ்காரர் கைப்பற்றி அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    அங்கு போலீசாரிடம் கண்ணனை ஒப்படைத்தார். இதையடுத்து அவரிடம் கல்லூரி மாணவியை கொன்றதற்கான காரணம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். தனது காதலை புறக்கணித்ததால் சினேகாவை கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி கண்ணனை தனிநபராக பிடித்து வந்த போலீஸ்காரர் சசிகுமார் பாபுவை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பாராட்டினர்.

    • ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.
    • அதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு ஹரிஹரன் தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பாண்டிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபர்ணா (வயது19) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது அங்குள்ள தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஹரிஹரன் (23) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹரிஹரன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.

    ஆகவே தன்னை பெண் கேட்டு வருமாறு அபர்ணா கூறியிருக்கிறார். அதன் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அபர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு ஹரிஹரன் சென்றுள்ளார். ஆனால் ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.

    தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவிடம் தொடர்ந்து ஹரிஹரன் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முனீஸ்வரன் என்பவருக்கு அபர்ணாவை நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிஹரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அபர்ணாவின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று பாண்டியும், அவரது மனைவியும் வழக்கம்போல் மளிகை கடைக்கு சென்று விட்டனர். அபர்ணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மாலையில் அவரது வீட்டிற்கு ஹரிஹரன் வந்தார். அப்போது அபர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட முனீஸ்வரனுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். தன்னுடன் வந்து விடுமாறு அபர்ணாவை ஹரிஹரன் அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரி குத்தினார். பின்பு அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்நிலையில் அபர்ணாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்த முனீஸ்வரன், வீட்டில் யாரோ தகராறு செய்கிறார்கள் என அபர்ணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மளிகை கடையில் இருந்த அபர்ணாவின் தாய் மற்றும் சித்தப்பா ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள்ளே இருந்து ஹரிஹரன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பிடிக்க முயன்ற போது தன்னிடம் இருந்த பையை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    அந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கத்தி, சுத்தியல், கையுறை போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபர்ணா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அதில் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் அபர்ணாவை அவரது காதலன் ஹரிஹரன் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் சென்றதால் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன. அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ஹரிஹரன் எங்கு சென்றார்? என்று ரகசியமாக விசாரணை நடத்தினர்.

    அவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால் கோவை செல்லக்கூடிய வழித்தடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பதுங்கி இருந்த ஹரிஹரனை தனிப்படை போலீசார் இ்ன்று கைது செய்தனர்.

    இதையடுத்து அவர் அங்கிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். அபர்ணாவை கொலை செய்வதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை காதலித்த பெண் தன்னுடன் வர மறுத்ததால், தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து ஆத்திரமடைந்து அபர்ணாவை கொன்றதாக ஹரிஹரன் தெரிவித்தாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×