என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வாலாஜா அருகே பயங்கரம்- நர்சு கழுத்தை இறுக்கிக்கொன்ற காதலன்
- வாலாஜா தடுப்பணை அருகே அவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரேஷ்மா லதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா லதா (வயது 27). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
அப்போது ஆற்காடு அருகே உள்ள மேல்விசாரத்தை சேர்ந்த குமரன் (29) என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதலுக்கு ரேஷ்மா லதாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சென்னையிலேயே அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். சென்னையில் அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கோபிநாத் என்பவருக்கும் ரேஷ்மா லதாவுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்கள் சென்னையிலேயே குடியேறினர். 5 மாத கைக்குழந்தை உள்ளது.
அதே போல குமரனுக்கும் திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் ரேஷ்மாலதா, குமரன் கள்ளத்தனமாக சந்திக்க தொடங்கினர். இருவரும் அடிக்கடி போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
இது ரேஷ்மாலதாவின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரேஷ்மா லதா ராமாபுரம் கிராமத்திற்கு வந்து தங்கி இருந்தார். ஆத்திரமடைந்த அவரது கணவர் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார்.
ரேஷ்மா லதா கணவரை பிரிந்த நிலையிலும் குமரனுடன் போனில் பேசி வந்தார்.
கடந்த 22-ந் தேதி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு ரேஷ்மா லதா வெளியே சென்றார். அவரை சந்திப்பதற்காக குமரன் பைக்கில் வந்தார். இருவரும் வாலாஜா தடுப்பணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் சந்தித்தனர். முதலில் இருவரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து கணவருடன் பிரச்சினை உள்ளதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமரனை ரேஷ்மா லதா வற்புறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ரேஷ்மாவை தாக்கி அவரது துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
மேலும் எந்தவித ஆதாரங்களும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக ரேஷ்மா லதா வைத்திருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.
ரேஷ்மா லதாவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
வாலாஜா தடுப்பணை அருகே அவரது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.
வாலாஜா அணைக்கட்டு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரேஷ்மா லதா குமரனுடன் பைக்கில் வந்தது பதிவாகி இருந்தது. இதனை வைத்து குமரனை போலீசார் தேடி வந்தனர்.
செல்போன் சிக்னல் மூலம் அவர் பெங்களூருவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பெங்களூரு சென்று குமரனை கைது செய்தனர்.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரேஷ்மா லதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்