காதலித்த பெண்ணுடன் நெருங்கி பழகியதால் வாலிபரை எரித்து கொல்ல முயற்சி- முன்னாள் காதலன் கைது

பஷீர் ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இளம்பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்ய கொடுக்க மறுத்து விட்டனர். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுடன் ராஜேஷ் அடிக்கடி பேசி வந்தார்.
காதலித்த பெண்ணுடன் நெருங்கி பழகியதால் வாலிபரை எரித்து கொல்ல முயற்சி- முன்னாள் காதலன் கைது
Published on

பெரம்பூர்:

வியாசர்பாடி, கணேசபுரம், சுந்தரம் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர் புளியந்தோப்பில் உள்ள ஆடு தொட்டியில் ஆடு மற்றும் மாடுகளை பராமரிக்கும் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவர் ஆடு தொட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மினிவேன் ஒன்றில் படுத்து தூங்கினார்.

அப்போது ராஜேஷ் மீது மர்மநபர் தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் உடல் கருகிய அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தபோது வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பஷீர் (21) என்பவர் மினிவேனின் டீசல் டேங்கில் இருந்த டீசலை துணியில் நனைத்து அதனை தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் மீது போர்த்தி தீ வைத்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

இதையடுத்து பஷீரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே காதலித்த பொண்ணுடன் ராஜேஷ் நெருங்கி பழகியதால் அவரை எரித்து கொல்ல முயன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

பஷீர் ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்ய கொடுக்க மறுத்து விட்டனர். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுடன் ராஜேஷ் அடிக்கடி பேசி வந்தார்.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்த பஷீர் இரவில் ராஜேஷ் தனியாக தூங்குவதை நோட்டமிட்டு தீ வைத்து எரித்து உள்ளார்.

மேலும் தீக்காயம் அடைந்த ராஜேசை ஆஸ்பத்திரியில் இருந்தும் பஷீர் கவனித்து வந்து இருக்கிறார். கண்காணிப்பு கேமிரா பதிவால் அவர் சிக்கி கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com