search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி அமைச்சர்"

    • தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    • "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்"

    "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை ஹேம்லதா பைர்வா மீதான இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

    கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவருமான டிகா ராம் ஜூலி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆசிரியை ஹேம்லதா பைர்வாவை தடுத்த கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அவரை இடைநீக்கம் செய்ததன் மூலம் பாஜக அரசு தலித் விரோத அரசு என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, கோட்டா மாவட்டத்தின் சங்கோட் பகுதியில் உள்ள அரசு மூத்த மேல்நிலைப் பள்ளி கஜூரியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் பணியில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்
    • இவ்வருட தேசிய கல்வி தின கருப்பொருள் "புதுமையை ஏற்றல்"

    சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், மவுலான அபுல் கலாம் ஆசாத். 1947 ஆகஸ்ட் 15லிருந்து 1958 பிப்ரவரி 2 வரை அவர் இப்பதவியை வகித்தார்.

    அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக அவர் பிறந்த தினமான நவம்பர் 11, ஆண்டுதோறும் தேசிய கல்வி தினம் (National Education Day) என இந்திய அரசால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி, கல்வியாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர் அபுல் கலாம் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்தியாவின் பெருமைமிகு மகனான அபுல் கலாம் ஆசாத், கல்விக்கு ஆற்றிய அரும்பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவரது ஆற்றலை நினைவுகூரும் வகையிலும், அவரது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் "தேசிய கல்வி நாள்" என கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது" என 2008 நவம்பர் 11 அன்று தேசிய மனிதவள துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கங்கள், பட்டி மன்றங்கள், உரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அவர்களின் ஆற்றலை வளர்க்கும் வகையில் கதை, கட்டுரை, விவாதம், பேச்சு உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறும்.

    புதுமையான திட்டங்களையும், வழிமுறைகளையும் சிந்திக்கவும், செயல்படுத்தவும், இந்தியர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, 2023க்கான தேசிய கல்வி தின கருப்பொருளாக (theme) "புதுமையை ஏற்றல்" (Embracing Innovation) முன்னிறுத்தப்பட்டுள்ளது.

    1888 நவம்பர் 11 அன்று சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் பிறந்த ஆசாத், 1958 பிப்ரவரி 22 அன்று இந்திய தலைநகர் டெல்லியில் காலமானார்.

    1992ல் அவருக்கு இந்திய அரசாங்கம் "பாரத ரத்னா" (Bharat Ratna) எனும் இந்தியாவின் உயரிய விருதை  (இறப்புக்கு பின்) வழங்கி கவுரவித்தது.

    இந்தியாவில் கல்வியறிவு 75 சதவீதம் உள்ளதாகவும், அதிகபட்சமாக கேரளாவில் 93 சதவீதமும், குறைந்த அளவாக பீகாரில் 61 சதவீதம் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×