என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி மாயம்"
- கல்லூரிக்கு சென்று விட்டு அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார்.
- மறுநாள் காலையில் பார்த்த போது மோனிகா காணவில்லை.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாடரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். சவர தொழிலாளியான இவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மோனிகா (வயது19). இவர் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று விட்டு அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்த போது மோனிகா காணவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து மத்தூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
தேனி:
கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கருப்பதேவன் மகள் ஜீவிதா(19).
இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ஜீவிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் கிள்ளிவளவன். இவரது மகள் மதுமிதா. கல்லூரி மாணவி.
- வீரசாமிவெளியில் செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் கிள்ளிவளவன். இவரது மகள் மதுமிதா. கல்லூரி மாணவி.
இவர் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர் சேர்ந்தவர் வீரசாமி (வயது 42). இவர் வெளியில் செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வீராசாமியை தேடி வருகிறார்கள்.
- விடுமுறையில் இருந்த கல்லூரி மாணவி கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த நீதி மகள் ஹரிஷா(17).
இவர் தேனியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறையில் இருந்த அவர் கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்
- தென்கரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த மணி மகள் கவுசல்யா(19).
பி.காம் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக சென்றவர் மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வடமதுரை அருகே கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
- இந்த நிலையில் தேர்வு எழுதிச் சென்ற மாணவி திடீரென மாயமானார்.
வடமதுரை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் மணிசேகரன் மகள் சுருதி (வயது19). இவர் அய்யலூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். கல்லூரியில் தேர்வு எழுதி விட்டு சொந்து ஊருக்கு செல்வதாக கூறி சென்றார்.
ஆனால் மாணவி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தஅவரது பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமை யிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருதியை தேடி வருகின்றனர்.
- கவிதா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் அழகு நிலையத்திற்கு சென்ற கவிதா திரும்பி வீட்டிற்கு வரவில்லை.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்னகாவனம் தலையாரி பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 22). இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் அழகு நிலையத்திற்கு சென்ற கவிதா திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்