search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    கோப்பு படம்

    கூடலூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

    • கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    தேனி:

    கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கருப்பதேவன் மகள் ஜீவிதா(19).

    இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ஜீவிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×