search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் மலர்விழி"

    இண்டூர் அருகே விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கலெக்டர் மலர்விழியின் மனிதாபிமானத்தை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஆதனூரைச் சேர்ந்த கணவன் - மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். அந்த நேரத்தில் பென்னாகரத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விட்டு கலெக்டர் மலர்விழி காரில் தருமபுரி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    இந்த விபத்தை நேரில் பார்த்த கலெக்டர் காரை நிறுத்தி அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். 

    108 ஆம்புலன்சில் காயம் அடைந்த இருவரையும் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கலெக்டரின் இந்த மனிதாபிமான உதவியை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
    தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசினார்.
    தர்மபுரி:

    எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நோயால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் முன்னிலை வகித்தார்.

    மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் ஆஷாபிரடரிக், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி, மாவட்ட திட்ட மேலாளர் பிருந்தா, டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் எய்ட்ஸ் தடுப்பு குறித்தும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் எச்.ஐ.வி. நோய்தொற்று மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் மலர்விழி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும். இதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், உயர்தர சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயால் இறப்பில்லாத நிலையை இந்த மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பதாகைகளில் கையெழுத்திட்டனர். எய்ட்ஸ்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
    ×