search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனிதாபிமானம்"

    இண்டூர் அருகே விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கலெக்டர் மலர்விழியின் மனிதாபிமானத்தை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஆதனூரைச் சேர்ந்த கணவன் - மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். அந்த நேரத்தில் பென்னாகரத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விட்டு கலெக்டர் மலர்விழி காரில் தருமபுரி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    இந்த விபத்தை நேரில் பார்த்த கலெக்டர் காரை நிறுத்தி அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். 

    108 ஆம்புலன்சில் காயம் அடைந்த இருவரையும் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கலெக்டரின் இந்த மனிதாபிமான உதவியை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
    ×