search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நூல்"

    • கர்னூல் மாவட்டத்தில் விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா.

    திருப்பதி:

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சியாக வண்ணங்களை தூவி உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

    ஆனால் ஆந்திராவில் ஹோலி பண்டிகையில் ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சந்தேகுட்லூர் கிராமத்தில் பழங்காலத்தில் இருந்தே விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹோலி கொண்டாட்டத்தின் போது அங்குள்ள மன்மதா தெய்வத்திற்கு திருவிழா நடத்தப்படுகிறது.

    அப்போது கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்கள் வேடமணிகிறார்கள். அவர்கள் அழகாக பட்டு சேலை கட்டி, நகைகள் அணிந்து பெண்கள் போல அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் தலை நிறைய பூ வைத்து தட்டுகளில் பூ, பழம் தேங்காய் உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக அங்குள்ள மன்மதன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு ஆண்கள் பெண்கள் உடையில் மன்மத பூஜை செய்கிறார்கள். மேலும் அந்த தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களையும் செலுத்துகின்றனர். பாரம்பரியமாக நடைபெறும் மன்மதத் திருவிழா எங்கள் கிராமத்தின் கடவுள் நம்பிக்கையின் உணர்வை குறிக்கிறது என அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ×