search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்ப்யூட்டர் சென்டர்"

    • சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்ற விஜித்ரா மாலையில் வீடு திரும்பவில்லை.
    • அவர் தானாக எங்காவது சென்றாரா? அல்லது யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி :

    தக்கலை வாளோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் விஜித்ரா (வயது 21).

    பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், திங்கள் நகரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்ற விஜித்ரா மாலையில் வீடு திரும்பவில்லை.

    அவர் என்ன ஆனார்? என்ற விவரம் தெரிய வில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து அவரது தாயார் விமலா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான விஜித்ராவை தேடி வருகின்றனர். அவர் தானாக எங்காவது சென்றாரா? அல்லது யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பஸ் நிலையம் எதிரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு முத்து பாண்டியன் (39) என்பவரை போலீசார் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியது பல்லடம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ், விக்கி, முத்து என விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் தலை மறைவாகி விட்டனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கோழிப் போர்விளையை சேர்ந்தவர் விஜயலதா (வயது 48). இவரது 17-வயதான மகள் பிளஸ்-2 முடித்துவிட்டு தக்கலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் கம்ப்யூட்டர் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து மார்த் தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ×