search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி பகவதி அம்மன்"

    • இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
    • இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3¾ மணி நேரம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணி யால் மூடி வைக்கப்படுகிறது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்க ப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.
    • ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 26-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், விசேஷ பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

    நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் பரிவேட்டை மண்டபத்தை அடைந்து பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உற்சவ அம்பாள் சிலையை ஆராட்டு மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.

    அதைதொடர்ந்து வருடத்தில் முக்கியமான ஐந்து விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    • அம்மனுக்கு 8 வகையான திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலையில் சமய உரை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், சந்தனம், களபம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், காலை 10 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைதொடர்ந்து 10.30 மணிக்கு அன்னதானம், பகல் 11.30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும்போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஒன்றிய செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலத்தில் யானை, குதிரை, முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், கேரளா புகழ் தெய்யம் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றது.

    பரிவேட்டை ஊர்வலம் மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது. அங்கு பகவதி அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி குதிரை வாகனத்தை வேட்டை மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்து வாகனத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி வைத்தனர்.

    பின்னர், பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கோவில் மேல்சாந்தி வேட்டை மண்டபத்துக்கு உள்ளே 4 பக்கமும் அம்பு எய்தார். அதன்பிறகு வேட்டை மண்டபத்துக்கு வெளியே 4 திசையை நோக்கி அம்புகளை எய்தார். இறுதியாக ஒரு இளநீரின் மீது அம்பு எய்தார். அம்பு பாய்ந்த இளநீரை கோவில் ஊழியர் ஒருவர் கையில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க ஓடி வலம் வந்தார். இந்த நிகழ்வானது பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் அம்பு எய்து வதம் செய்து அழித்ததாக கருதப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் மகாதானபுரத்தில் உள்ள நவநீதசந்தான கோபாலகிருஷ்ணசாமி கோவிலுக்கு முன்பு சென்று நின்றார். அங்கு பகவதி அம்மனுக்கும், நவநீதசந்தான கோபால கிருஷ்ணசாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடந்தது. பின்னர், அம்மன் வாகன பவனி மகாதானபுரம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு வந்தது.

    பின்னர், அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்காரமடத்தில் சிறிது ஓய்வுக்கு பின் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • 11.30 மணிக்கு அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது.
    • இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலையில் சமய உரை, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழாவான இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    11.30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும் போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலத்தில் யானை, குதிரை, முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடைபெறும்.

    இந்த ஊர்வலம் மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருப்பார்கள்.

    இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு சென்று விட்டு மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.

    அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவில், கொட்டாரம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திருவிழா நடக்கும் மகாதானபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • கூடை-கூடையாக மலர் தூவி வழிபட்ட இலங்கை பக்தர்கள்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ - திரளான பக்தர்கள் தரிசனம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. 5-ம்திருவிழாவான நேற்று இரவுபரத நாட்டியம் நடந்தது.

    அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்த ருளி கோவிலின் வெளிபிர காரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேல் தலைமையில் இலங்கை பக்தர்கள் கூடை-கூடையாகதாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர் களை தூவி வழிபட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் தம்பித்தங்கம், தென்தாமரை குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் சிவபாலன், தோவாளை ஒன்றிய பொரு ளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மா சனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.6-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்த ருளி கோவிலின் வெளிப்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • குமரியாக வீற்றிருப்பதால் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றாள்.
    • இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    கன்னியாகுமரி பகவதி அன்னையின் ஒளிமிகுந்த மூக்குத்தி யோக சக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. சிவபெருமானை மணம்புரிய விரும்பி கன்னியாகுமரியில் பகவதி அம்மன் தவமிருந்தாள். ஆனால் சிவன் வராமல் போகவே கோபத்தில் இருந்த பகவதி தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு பாணாசுரன் வற்புறுத்தினான்.

    இதனால் மேலும் கோபமாகி அசுரனை அழித்தாள் பகவதி. தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி சாந்தமானாள். அவள் குமரியாகவே அங்கு வீற்றிருப்பதால் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றாள்.

    இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணி வந்த கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதனாலேயே கோவிலின் கடற்கரை நோக்கிய முன் கோபுரவாயிலான கிழக்கு வாயில் மூடப்பட்டு வடக்குப்புற வாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • தேவி, கன்னியாக இருக்கிறாள். அதற்கும் காரணம் உண்டு.
    • இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    நீலத்திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ் செய் குமரி என்று முண்டாசுக் கவிஞன் பாரதி போற்றி, புகழ்ந்து பாடிய பெருமைக்குரிய கோவிலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விளங்குகிறது. வங்காள விரிகுடா, அரபிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் தேவி, கன்னியாக இருக்கிறாள். அதற்கும் காரணம் உண்டு.

    பாணாசுரனின் அட்டகாசம்

    கடுமையான தவங்கள் மூலமாக அசுரர்கள் கூட கடவுளிடம் இருந்து பல்வேறு வரங்களை பெற்றுள்ளனர் என்று பழங்கால புராணங்கள் கூறுகின்றன. அந்த வரிசையில் பாணாசுரன் என்ற அரக்கனும், பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தையும், ஒரு கன்னிப்பெண்ணைத்தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும் பெற்றதாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மென்மையான உடல் வாகுவையும், மனதையும் கொண்ட ஒரு கன்னிப் பெண்ணால் தனக்கு எப்படி மரணம் நிகழ முடியும்? என்ற எண்ணத்தில்தான் பாணாசுரன் இந்த வரத்தை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

    வரத்தைப் பெற்ற பாணாசுரனின் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு போயிற்று. முனிவர்களையும், தேவர்களையும் அவன் கொடுமைப்படுத்த தொடங்கினான். இதனால் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கியது. உலகில் தீமையும், பாவமும் பெருகின. அறியாமையும், அநீதியும் ஆட்சி புரிந்தன. மூவுலகில் உள்ள தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் முனிவர்களும், தேவர்களும் விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தனர். அப்போது விஷ்ணு, பாணாசுரன் பெற்ற வரத்தையும், ஒரு கன்னிப் பெண்ணால் தான் அவனை அழிக்க முடியும் என்ற ரகசியத்தையும் அவர்களுக்கு கூறினார்.

    திருவிளையாடல்

    விஷ்ணுவின் அருகில் அமர்ந்திருந்த சிவபெருமான் இதற்கு தீர்வு வழங்கினார். பாணாசுரனை, பராசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் என்றார். இதனால் தேவர்களும், முனிவர்களும் பராசக்தியை வேண்டி பெரும் வேள்வியை மேற்கொண்டனர். வேள்வி முடிவில் சக்தி தேவி வெளிப்பட்டு பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து நன்மையும், அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி கொடுத்தாள்.

    தேவர்களையும், முனிவர்களையும் அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற சக்திதேவி கன்னிப்பெண்ணாக தென்பகுதியான குமரியில் அவதரித்தாள். அவள் சிவபெருமானிடம் பக்தி கொண்டு, அவரை மணம் முடிப்பதற்கு கடும் தவத்தை மேற்கொண்டாள். அந்த சமயத்தில் சிவபெருமானும் சுசீந்திரம் என்னும் ஊரில் தாணு என்ற பெயர் கொண்டு வாழ்ந்து வந்தார். பூலோகத்தில் கன்னிப் பெண்ணாக அவதரித்த சக்தி தேவியின் அழகை பார்த்து அவரை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் சிவபெருமான். இதனை அறிந்த தேவர்களுக்கு பயம் வந்து விட்டது. சக்தி தேவிக்கு திருமணம் ஆகிவிட்டால் அந்த அசுரனை எப்படி அழிப்பது? என்பதுதான் அவர்களுடைய பயம். ஆனால் முக்காலத்தையும் உணர்ந்த நாரதருக்கு மட்டும் இது அந்த சிவபெருமானின் திருவிளையாடல்தான் என்பது தெரிந்திருந்தது.

    திருமணம் நின்றது

    சக்தி தேவிக்கும், சிவபெருமானுக்கும் நடத்த வேண்டிய திருமண பேச்சு சபைக்கு வந்தது. ஆனால் இந்த திருமணம் எப்படியாவது நிற்க வேண்டும் என்பது தான் தேவர்களின் எண்ணமாகவும், நாரதரின் எண்ணமாகவும் இருந்தது. நாரதரும் திருமணத்தை நிறுத்த கலகத்தை தொடங்கினார். நாரதரின் கலகம் நன்மையில் தான் போய்முடியும் என்பார்கள். நாரதர் சிவபெருமானை பார்த்து தேவர்களது சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தார். சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளையான சிவபெருமான் திருமணம் நடைபெறும் இடத்துக்கு வந்துவிட வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. தேவியிடமும் இந்த கோரிக்கை குறித்து கூறப்பட்டது. மாப்பிள்ளை சூரிய உதயத்துக்கு முன்பு வரவில்லை என்றால் இந்த திருமணம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

    அவ்வாறே திருமணம் நடைபெறும் நாள் வந்தது. அன்று இரவு சிவபெருமான், குறித்த நல்ல நேரம் தவறிவிடக்கூடாது என எண்ணி சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இரவில் புறப்பட்டார். போகும் வழியெங்கும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனால் வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோது நாரதர் ஒரு சேவல் உருவம் கொண்டு கூவினார். அதிகாலையில் கூவக்கூடிய சேவல் கூவியதால் பொழுது புலர்ந்துவிட்டது என தவறாக புரிந்துகொண்ட சிவபெருமான் சுசீந்திரத்துக்கு வருத்தத்தோடு திரும்பினார்.

    சிவபெருமான் மணம் முடிக்க வருவதாகக் கூறிவிட்டு, வராமல் போனது குமரி முனையில் திருமணத்துக்காக காத்திருந்த தேவிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

    வதம்

    இதனால் திருமணத்துக்கு என்று சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவு பதார்த்தங்களையும், அலங்காரத்துக்காக வைக்கப்பட்டு இருந்த பூக்களையும் தேவி கடல் மணல் பரப்பில் வீசினாள். எனவே தான் கன்னியாகுமரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ண, வண்ண மணலாக மாறி காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. கடும் வருத்தத்தில் இருந்த தேவி, அதன் பிறகு என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து தனது தவத்தை தொடர்ந்தாள். இவ்வாறு தேவி கடும் தவம் இருக்கும்போது ஒருநாள் பாணாசுரன் தேவியின் அழகைப்பற்றி கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் தன்னை மணந்து கொள்ளும்படி அவளை வேண்டினான். ஆனால் தேவி அவனை மணம் முடிக்க மறுத்தாள். ஆனால் பாணாசுரன் விடவில்லை. கட்டாயப்படுத்தி தன்னை மணம் முடிக்க சக்திதேவியை வற்புறுத்தினான். மேலும் தனது உடல் வலிமையால் தேவியை கவர்ந்து செல்ல எண்ணி தனது உடைவாளை உருவினான்.

    இத்தகைய தருணத்தை எதிர்நோக்கி இருந்த தேவியும் தனது போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில் தனது சக்கராயுதத்தால் பாணாசுரனை வதம் செய்தாள் தேவி. தேவர்கள் அனைவரும் தங்களை காப்பாற்றியதற்காக தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தி அருளினாள். அதன்பின் கோபம் தணிந்த தேவி, சாந்தி அடைந்து அன்று முதல் இன்றுவரை கன்னியாகுமரியில் கன்னிப்பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து அந்த சிவபெருமானை நினைத்து மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள். தவமிருந்தபடியே தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் போக்கி வருகிறாள் என்கிறது தல புராணம்.

    பரிவேட்டை நிகழ்ச்சி

    தேவி, பாணாசுரனை கொன்றழித்ததை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் நவராத்திரி விழா இந்த கோவிலில் நடைபெறுகிறது. இதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவின் நட்சத்திர நிகழ்வாக கருதப்படுவது 10-ம் நாள் நடக்கும் பரிவேட்டையாகும். பரிவேட்டை நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும். காலை 9.15 மணிக்கு பிறகு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன் பிறகு அம்மன் எலுமிச்சை பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். அம்மன் எழுந்தருளி உள்ள வாகனம் கோவிலில் இருந்து வெளியே வந்ததும் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் முன்னால் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் கையில் வாள் ஏந்தியபடியும், வில் அம்பு ஏந்தியபடியும் நடந்து செல்வர். ஊர்வலத்துக்கு முன்பு பஜனைக் குழுவினர் பஜனை பாடிச் செல்வார்கள். அதனைத் தொடர்ந்து நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்ட 3 யானைகளின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்த படியும், பகவதி அம்மன் உருவப்படத்தை தாங்கிய படியும் அணிவகுத்துச் செல்வார்கள்.

    ஆராட்டு

    அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளிச் செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ணக்கோலமிட்டு திருவிளக்கு ஏற்றி தோரணங்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்து வரவேற்பார்கள். மேலும் திருக்கண் சாற்றியும் வழிபடுவார்கள். கோவிலில் இருந்து புறப்படும் பரிவேட்டை ஊர்வலம் மாலையில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடையும். அங்கு கோவில் மேல்சாந்தி போற்றிகள் பூஜைகள் நடத்துவார்கள். அதன் பின்னர் அம்பு பாய்ந்த இளநீருடன் பக்தர் ஒருவர் அம்மன் வாகனத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

    பின்னர் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கு வாகனத்தில் கோவில் நோக்கி புறப்படுவார். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெறும். அமாவாசை, தை அமாவாசை, வைகாசி விசாகத் திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா ஆகிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் நவராத்திரி திருவிழாவின் கடைசி திருவிழாவான பரிவேட்டை திருவிழா அன்றும் திறக்கப்படும். இந்த முக்கிய நாட்களில் 1 மணி நேரம் மட்டுமே கிழக்கு வாசல் திறக்கப்படுவது வழக்கம். மற்ற நாட்களில் இந்த கிழக்கு வாசல் மூடியே இருக்கும். பரிவேட்டை முடிந்து திரும்பிய அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் எழுந்தருள்வார்.

    முக்கிய திருவிழாக்கள்

    ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாள் நடைபெறும் நவராத்திரி திருவிழா, வைகாசி மாதத்தில் 10 நாள் நடைபெறும் விசாக திருவிழா மற்றும் தேரோட்டம், தெப்பத் திருவிழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய திருவிழாக்கள் ஆகும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த திருவிழா நாட்களில் காலையிலும், இரவிலும் ஊர் தெருக்கள் வழியாக தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். 9-வது நாள் தேர்த்திருவிழாவும், 10-வது நாள் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.

    கொடிமரக்கயிறு வழங்கும் மீனவர்கள்

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி கொடியேற்றத்துக்கு முந்தையநாள் மத நல்லிணக்கத்தை எடுத்துக்கூறும் வகையில் கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்கள் சார்பில் கொடிமர கயிறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கப்படும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

    விவேகானந்தர் வழிபட்ட அம்மன்

    1892-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரி முனை வந்து அம்மனை வழிபட்டு விட்டு, கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் தியானம் செய்த பாறையில் அவர் நினைவாக மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

    பரசுராமர் குமரி தெய்வ உருவை இந்த இடத்தில் அமைத்து வழிபட்ட தலம். குமரி கடல் முனையில் இருந்தாலும் கோவிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக்கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம். இந்த தண்ணீரைக் கொண்டுதான் கோவிலில் தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள் அதிகாரிகள். விவேகானந்தர் பாறையில் பகவதி அம்மனின் கால்தடம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • 5-ந்தேதி அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 5-ந்தேதி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழாவின் போது பாரம்பரிய முறைப்படி 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசி விசுவநாதர் கோவில் கிணற்றில் இருந்து எடுத்து கொண்டு வரப்படும்.

    அதன்படி நேற்று காலை 9 மணிக்கு வெள்ளிக் குடத்தில் புனித நீர் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    யானை ஊர்வலத்தை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வாகன பவனி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    10-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி காலை 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்துக்கு மாலை சென்றடைந்து பரிவேட்டை நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

    அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    மேலும் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியை கோவில் நிர்வாகத்தினருடன் கன்னியாகுமரி பக்தர்கள் சங்கமும் இணைந்து செய்கிறது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் பக்தர்கள் தரிசனம்
    • திருவிழா அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்றுகாலை தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. எண்ணை, பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, சீனிவாசன் போற்றி ஆகியோர் நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்ககிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. பின்னர் மூலஸ்தானத்துக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் தியாக சவுந்தரிஅம்மன் என்ற உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை நடந்தது.

    பின்னர் அங்கிருந்து உற்சவ அம்பாளை கோவில் மேல் சாந்தி தனது தோளில் சுமந்து கொண்டு மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக கொலு மண்டபத்துக்கு எடுத்துச் சென்றார். கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தது. அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது.

    கொலு மண்டபத்தில் ஏராள மான கொலு பொம்மைகளை 9 அடுக்குகளாக அலங்கரித்து வைத்து இருந்தனர். கொலு மண்டபத்தில் எழுந்தருளிய பகவதி அம்மனையும் அங்கு அலங்கரித்து வைத்தி ருந்த கொலுவை திரளான பக்தர்கள் தரி சித்தனர். நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவி சாந்தினி பகவதியயப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவைத் தலைவர் தம்பித் தங்கம், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரைதினேஷ், கன்னியா குமரி பேரூர் செயலாளர் எழிலன், தோவாளை ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பகவதியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவை யொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், அதைத் தொடர்ந்து சமய உரையும், இரவு 7மணிக்கு சிறப்பு பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான அடுத்த மாதம் 5-ந்தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து மதியம் 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதா னபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், தங்க நாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்று அடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதான புரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில் கள் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான 26-ந் தேதி காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவில் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வருதல் போன்றவை நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வெள்ளி கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம் போன்றவற்றில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வருவார்.

    விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 9.15 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நிகழ்ச்சியில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம் போன்றவை இடம்பெறுகின்றன. ஊர்வலம் முடிவில் மகாதானபுரத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு வருதல் நடைபெறும்.

    நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து ஆண்டுக்கு 5 முக்கிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பரிவேட்டை நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.
    • ஸ்ரீ பலி பூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி நேற்று பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அம்மனுக்கு அபிஷேகமும், காலை 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை நடைபெற்றது. 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜையும் பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • 17 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.
    • 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் உள்ளது. இந்த உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3 மாதங்களாக திறந்துஎண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் உண்டியல் மூலம் ரூ.18 லட்சத்து 39 ஆயிரத்து 163 வசூலாகிஉள்ளது.இது தவிர 11 கிராம் தங்கமும், 193 கிராம் 600 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி உள்ளது.

    ×