search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட பணிகளை"

    • 420 வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.
    • ஆணையர் ஜெயந்தா லாசரஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.

    இங்கு வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பவானிசாகர் கோழி பண்ணை அருகே 12 ஏக்கரில் ரூ.20 கோடி செலவில் சுமார் 420 வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

    இதை அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெயந்தா லாசரஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமால், சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முதல்-அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கூடுதல்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

     தாராபுரம் :

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கூடுதல்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையிலும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகளும் கட்டப்படுகிறது.

    முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகள். 2-ம் தளத்தில் அறுவை அரங்கு 2-ல் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வதிகள்.3-ம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறைகள்.

    4-ம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகள்.5-ம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதிகள். 6-ம் தளத்தில் கண் சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×