search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடந்தது"

    • கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
    • இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. தினமும் காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் மாலையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகப்பட்சமாக சிற்றார் 2-ல் 90 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை கனமழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு சென்றனர்.

    பூதப்பாண்டி, கன்னிமார், குழித்துறை, மயிலாடி, கொட்டாரம், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று அணையிலிருந்து தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்பிவருவதையடுத்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோதை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர்களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டினம் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருவதால் இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.14 அடியாக இருந்தது. அணைக்கு 468 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 328 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.18 அடியாக உள்ளது. அணைக்கு 674 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மழைக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 4 வீடுகளும் தோவாளை தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழையாறு, வள்ளியாறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 10.2, சிற்றாறு 1-8.6, சிற்றார் 2-90, பூதப்பாண்டி 19.2, களியல் 60, கன்னிமார் 19.2, கொட்டாரம் 4, குழித்துறை 80, நாகர்கோவில் 12.4, சுருளோடு 10, தக்கலை 32, குளச்சல் 6, இரணியல் 15, பாலமோர் 5.2, மாம்பழத்துறையாறு 29, திற்பரப்பு 17.3, கோழிப்போர்விளை 12.6, அடையாமடை 18.1, குருந்தன்கோடு 16.4, முள்ளங்கினாவிளை 3.4, ஆணைக்கிடங்கு 28.4, முக்கடல் 7.4.

    • வன அதிகாரி இளையராஜா தகவல்
    • கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 3 கட்ட மாக பறவைகள் கணக் கெடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்திலும் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 50 வன ஊழியர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தேரூர் சுசீந்திரம், வேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.

    கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .இதனை வனத்துறை ஊழியர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட னர். கணக்கெடுப்பு பணியினை புத்தளம் மற்றும் தேரூர் பகுதியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை பறவைகள் வரத்து அதிகமாக காணப்படும்.புத்தளம், சாமிதோப்பு, தேரூர், வேம்பனூர், ராஜாக்கமங்கலம், புத்தளம் பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. பறவை ஆர்வலர்கள், வன அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புத்தளம் பகுதியில் வழக்கத்தை விட குறைவான பறவைகள் தென்பட்டது. அங்கு பூநாரை பறவைகள் அதிக அளவு உள்ளது. சுசீந்திரம் பகுதியில் கூலகடா மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் தென்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து பறவைகள் தற்போது இடம்பெற தொடங்கி உள்ளன. ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளன. தற்போது நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்த கட்டமாக மார்ச் மாதம் வனப் பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். மொத்தம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×